tamilni 274 scaled
உலகம்செய்திகள்

காசாவில் 24 மணி நேரத்தில் 345 பேர் பலி

Share

காசாவில் 24 மணி நேரத்தில் 345 பேர் பலி

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 345 பேர் பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், காசாவில் உள்ள வைத்தியசாலை மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது.

வடக்கு காசாவில் உள்ள குறித்த அல்-குவாத் வைத்தியசாலையில் சுமார் 400 நோயாளிகளும் பொதுமக்கள் 12,000 ஆயிரம் பேரும் தஞ்சமடைந்து இருப்பதக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலின் கோரத் தாக்குதலால், காசாவில் வாழும் 50,000 கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக ஐநா சபை தகவல் தெரிவித்துள்ளது.

காசாவின் மக்கள் தொகையில் பாதி குழந்தைகளாக உள்ளதால், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு 1 குழந்தை பலியாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர் தாக்குதல்களால், காசாவில் வாழும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என்று ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐநா சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, காசாவில் உள்ள 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றன.

காசாவில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அவதியுறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் அடுத்த ஒரு மாதத்தில் 5,500 பேருக்கு பிரசவம் நடக்கும் நிலையில் இருப்பதாக தெரிகிறது. பாதுகாப்பான குழந்தை பிறப்புக்கு கேள்விக்குறி எழுவதோடு, குழந்தை வளர்ப்பும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

காசாவில் ஒட்டுமொத்தமாக 25 சதவீதமான வீடுகள் சிதைக்கப்பட்டுள்ளன. 59 மருத்துவமனைகள், 170 கல்வி நிலையங்கள், குடிநீர் மற்றும் சுகாதார நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதே உலக மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...