tamilni 274 scaled
உலகம்செய்திகள்

காசாவில் 24 மணி நேரத்தில் 345 பேர் பலி

Share

காசாவில் 24 மணி நேரத்தில் 345 பேர் பலி

காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 345 பேர் பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், காசாவில் உள்ள வைத்தியசாலை மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது.

வடக்கு காசாவில் உள்ள குறித்த அல்-குவாத் வைத்தியசாலையில் சுமார் 400 நோயாளிகளும் பொதுமக்கள் 12,000 ஆயிரம் பேரும் தஞ்சமடைந்து இருப்பதக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலின் கோரத் தாக்குதலால், காசாவில் வாழும் 50,000 கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ உதவி கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாக ஐநா சபை தகவல் தெரிவித்துள்ளது.

காசாவின் மக்கள் தொகையில் பாதி குழந்தைகளாக உள்ளதால், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு 1 குழந்தை பலியாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர் தாக்குதல்களால், காசாவில் வாழும் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், முதியோர் என்று ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஐநா சபை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, காசாவில் உள்ள 1.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மனிதாபிமான உதவி தேவைப்படுகின்றன.

காசாவில் சுமார் 50,000 கர்ப்பிணிகள் மருத்துவ உதவிகள் கிடைக்காமல் அவதியுறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிலும் அடுத்த ஒரு மாதத்தில் 5,500 பேருக்கு பிரசவம் நடக்கும் நிலையில் இருப்பதாக தெரிகிறது. பாதுகாப்பான குழந்தை பிறப்புக்கு கேள்விக்குறி எழுவதோடு, குழந்தை வளர்ப்பும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.

காசாவில் ஒட்டுமொத்தமாக 25 சதவீதமான வீடுகள் சிதைக்கப்பட்டுள்ளன. 59 மருத்துவமனைகள், 170 கல்வி நிலையங்கள், குடிநீர் மற்றும் சுகாதார நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்பதே உலக மக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Share
தொடர்புடையது
13 4
செய்திகள்இந்தியா

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

கர்நாடகாவில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது....

wo
செய்திகள்உலகம்

ஈரானின் நிலத்தடி ஏவுகணைத் தளங்கள்: போர்க்களத்தில் பலவீனமான புள்ளிகளாக மாறினவா?

ஈரான் தனது ஏவுகணைப் படைகளைப் பாதுகாப்பதற்காகப் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் அமைத்திருந்த பிரம்மாண்டமான ‘ஏவுகணை...

12 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் படகு கவிழ்ந்து விபத்து: இருவர் உயிரிழப்பு, தேடுதல் பணிகள் தீவிரம்!

யாழ்ப்பாணம், குருநகர் இறங்குதுறையில் இன்று (06.03.2026) காலை பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து...

14 5
செய்திகள்உலகம்

இந்தோனேசியாவிலும் 16 வயதிற்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை: மார்ச் 28 முதல் அமுல்!

இந்தோனேசியாவில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு அந்நாட்டு அரசாங்கம் அதிரடித் தடை விதித்துள்ளது....