23 6583c220d91b6
உலகம்செய்திகள்

காசாவை தரைமட்டமாக்குவது முறையல்ல: இஸ்ரேல் செயலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்

Share

காசாவை தரைமட்டமாக்குவது முறையல்ல: இஸ்ரேல் செயலுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்

பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பதன் பொருள் காசா நகரை தரைமட்டமாக்குவது என்பது இல்லை என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலின் எல்லை நகரங்கள் மீது ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையிலான சண்டை முழு நீள போராக உருவெடுத்துள்ளது.

இதில் இதுவரை 20,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்ட நிலையில், அவற்றில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலஸ்தீனத்தின் காசாவிற்குள் நுழைந்து தரைவழி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டை என்பதன் பொருள் ஒட்டுமொத்த காசா நகரையும் தரைமட்டாக்குவது என்பது இல்லை என புதன்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரான்ஸ் 5 ஒளிப்பரப்பாளர்களுக்கு மக்ரோன் அளித்த பேட்டியில், பயங்கரவாதத்திற்கு எதிரான சண்டையில் காசா நகரை தரைமட்டமாக்குவது அல்லது பாகுபாடு இல்லாமல் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்ற சிந்தனையை நாம் வேரூன்ற அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வினையை உடனடியாக நிறுத்துமாறும், ஏனென்றால் இவை முறையானதாக இல்லை, மேலும் அனைத்து உயிர்களும் சமம் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது, நாங்கள் அனைவரையும் பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய மக்ரோன், பொதுமக்கள் பாதுகாப்பிற்கும், மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கும் பிரான்ஸ் அழைப்பு விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 6947c9eb14d31
உலகம்செய்திகள்

பங்களாதேஷில் தீப்பிடிக்கும் வன்முறை: அரசியல்வாதியின் வீட்டுக்குத் தீ வைப்பு; 7 வயது மகள் உடல் கருகி பலி!

பங்களாதேஷில் மாணவர் இயக்கத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து வெடித்துள்ள கலவரம், தற்போது...

Namal Rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

நிவாரணம் 10% மக்களுக்கே சென்றடையும்; நடைமுறைச் சாத்தியமான திட்டங்கள் அவசியம்” – நாமல் ராஜபக்ச காட்டம்!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசாங்கம் கடைப்பிடிக்கும் தற்போதைய நடைமுறைகள் போதுமானதாக இல்லை என...

பேராதனை
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேராதனை பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு: 29ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

‘டித்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின்...

25 69475175d454d
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையை மீட்டெடுக்க இந்தியாவின் ‘பேருதவித் திட்டம்’: நாளை கொழும்பு வருகிறார் ஜெய்சங்கர்!

புயல், வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையை மீட்டெடுப்பதற்கான பாரிய உதவித்...