tamilni 141 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: உள்நுழைகிறதா நேட்டோ

Share

இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்: உள்நுழைகிறதா நேட்டோ

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் ஆக்ரோஷமான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்க இங்கிலாந்து தனது ‘R08 குயின் எலிசபெத்’ எனும் போர் கப்பலை காசாவை நோக்கி அனுப்ப ஆலோசித்து வருகிறது.

இதற்கு முன்னர் அமெரிக்காவின் போர் கப்பல் தற்போது காசாவுக்கு அருகே நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.

இப்படி ஒரு தருணத்தில் இங்கிலாந்தும் தனது போர் கப்பலை அனுப்ப யோசித்திருப்பது நேட்டோ நாடுகள் பாலஸ்தீனத்திற்கு எதிராக ஒன்று திரள்கிறதோ? எனும் கேள்வியை எழுப்பியுள்ளது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த சனிக்கிழமையன்று கடுமையான தாக்குதலை ஆரம்பித்திருந்தது.

மத்திய கிழக்கின் பலம் பொருந்திய நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த இஸ்ரேல் மீது இப்படியான தாக்குதல், அதுவும் காசா எனும் சிறிய பகுதியிலிருந்து தொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விடயம் உலக நாடுகளையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. இதனையடுத்து இஸ்ரேல் 5வது நாளாக காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

Share
தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...