1 7 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலை எப்போது வேண்டுமானாலும் தாக்க தயாராக இருக்கும் மற்றொரு நாடு

Share

இஸ்ரேலை எப்போது வேண்டுமானாலும் தாக்க தயாராக இருக்கும் மற்றொரு நாடு

இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாகிய லெபனானிலிருந்து, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சம் உருவாகியுள்ளது.

பால்ச்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளில் ஒன்று லெபனான். இஸ்ரேலுக்கு வடக்கே அதன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள லெபனானில் ஹிஸ்புல்லா என்னும் போராளிக்குழு உள்ளது.

அந்தக் குழு ஈரான் ஆதரவு பெற்ற குழுவாகும். இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர், காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலை தாக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தக் குழுவிடம் 150,000 ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகள் இருக்கலாம் என இஸ்ரேல் கணித்துள்ளது. அத்துடன், 12 ஆண்டு கால நீண்ட சிரியப் போரில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான போராளிகளும் அந்த அமைப்பில் உள்ளனர்.

ஆகவே, இஸ்ரேல் ராணுவம், லெபனான் எல்லையில் அமைந்துள்ள 28 கிராமங்களில் வாழும் மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும், எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ரோந்து செல்லத் துவங்கியுள்ளார்கள்.

பல நாடுகள் ஹிஸ்புல்லா அமைப்பை எந்த தாக்குதலிலும் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள நிலையிலும், நேரம் வரும்போது செயலில் இறங்குவோம் என ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவரான Naim Qassem அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...