1 7 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலை எப்போது வேண்டுமானாலும் தாக்க தயாராக இருக்கும் மற்றொரு நாடு

Share

இஸ்ரேலை எப்போது வேண்டுமானாலும் தாக்க தயாராக இருக்கும் மற்றொரு நாடு

இஸ்ரேலுடன் எல்லையை பகிர்ந்துகொள்ளும் நாடுகளில் ஒன்றாகிய லெபனானிலிருந்து, பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என அச்சம் உருவாகியுள்ளது.

பால்ச்தீனத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகளில் ஒன்று லெபனான். இஸ்ரேலுக்கு வடக்கே அதன் எல்லையை ஒட்டி அமைந்துள்ள லெபனானில் ஹிஸ்புல்லா என்னும் போராளிக்குழு உள்ளது.

அந்தக் குழு ஈரான் ஆதரவு பெற்ற குழுவாகும். இந்நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பினர், காசாவுக்கு ஆதரவாக இஸ்ரேலை தாக்கலாம் என்ற அச்சம் நிலவுகிறது.

இந்தக் குழுவிடம் 150,000 ராக்கெட்கள் மற்றும் ஏவுகணைகள் இருக்கலாம் என இஸ்ரேல் கணித்துள்ளது. அத்துடன், 12 ஆண்டு கால நீண்ட சிரியப் போரில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான போராளிகளும் அந்த அமைப்பில் உள்ளனர்.

ஆகவே, இஸ்ரேல் ராணுவம், லெபனான் எல்லையில் அமைந்துள்ள 28 கிராமங்களில் வாழும் மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும், எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ரோந்து செல்லத் துவங்கியுள்ளார்கள்.

பல நாடுகள் ஹிஸ்புல்லா அமைப்பை எந்த தாக்குதலிலும் ஈடுபடவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள நிலையிலும், நேரம் வரும்போது செயலில் இறங்குவோம் என ஹிஸ்புல்லா அமைப்பின் துணைத் தலைவரான Naim Qassem அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...