tamilni 184 scaled
இலங்கைசெய்திகள்

காசா-இஸ்ரேல் போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

Share

காசா-இஸ்ரேல் போரால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

காசா – இஸ்ரேலுக்கு இடையில் அதிகரித்துள்ள யுத்த சூழ்நிலையின் விளைவாக உலக சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது.

இந்நிலையில் நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் இருப்புக்களை பாதுகாப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இந்த விடயம் தொடர்பான பணிப்புரைகளை அண்மையில் வழங்கியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CEYPETCO) தகவல் வெளியிட்டுள்ளது.

எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் தற்போது எவ்வித பிரச்சினைகளும் எழவில்லை என்றாலும், எதிர்வரும் காலங்களில் ஏதேனும் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு அரசாங்கம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

இந்நிலையில் சினோபெக் இலங்கையிலும் சில்லறை வர்த்தக நடவடிக்கைகளை வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதால், எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகத்தை எந்தவித நெருக்கடியும் இன்றி பராமரிக்க முடியும் என CEYPETCO மேலும் வலியுறுத்தியுள்ளது.

இருந்தபோதிலும், தற்போதைய உலகளாவிய சூழ்நிலையின் தாக்கத்தினால் ஏதேனும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டால், அதற்குரிய எரிபொருள் மேலாண்மை முறைகள் அறிவிக்கப்படும் என்று CEYPETCO தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் மற்றும் CEYPETCO நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புகளை இரண்டு மாதங்களுக்கு பிறகு எவ்வாறு பாதுகாப்பது என்ற நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளன.

மீண்டும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டால், முந்தைய QR குறியீட்டு முறை மீண்டும் தொடங்கப்படுமா அல்லது மற்றொரு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை தீர்மானிப்பதில் இந்த விவாதங்கள் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...