tamilni 217 scaled
உலகம்செய்திகள்

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறு: ஜோ பைடன் அறிக்கை

Share

காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது தவறு: ஜோ பைடன் அறிக்கை

இஸ்ரேல் மீண்டும் காசாவை முழுமையாக ஆக்கிரமிப்பது மிகப் பெரிய தவறாக முடியும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் பைடன் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த பைடன் தற்போது பாலஸ்தீனத்திற்காகவும் குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேர்காணலில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர் , ஹமாஸ் இயக்கத்தை அழிப்பது அவசியம். ஆனால் ஹமாஸ் பிடியில் உள்ள காசாவை முழுவீச்சில் இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு.

அத்துடன் ஹமாஸ் இயக்கமானது பாலஸ்தீன மக்களின் பிரதிநிதிகள் அல்ல. ஹமாஸ் குழுவை பாலஸ்தீனர்கள் குரலாக நினைத்துக் கொள்ளக் கூடாது எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.

மேலும் போரில் குழந்தைகளும் பெண்களும் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

போரில் இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா வழங்கும் என உறுதியளித்த பைடன் இஸ்ரேல் போர் விதிகளுக்கு உட்பட்டு நடக்கும் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...