6 7 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸின் தாக்குதல் கொடூரமான அட்டூழியம்! அவர்கள் எதிர்த்து போராட அனைத்தையும் செய்வேன் – சூளுரைத்த இஸ்ரேல் நடிகை

Share

ஹமாஸின் தாக்குதல் கொடூரமான அட்டூழியம்! அவர்கள் எதிர்த்து போராட அனைத்தையும் செய்வேன் – சூளுரைத்த இஸ்ரேல் நடிகை

ஹமாஸை எதிர்த்து போராட தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

Fauda எனும் வெப் சீரிஸில் நடித்து வருபவர் நடிகை ரோனா லீ ஷிமோன் (40).

இவர் ஹமாஸின் தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியானதால் ஆழ்ந்த மனவேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து அவர் பேசும்போது, ‘நாங்கள் ஒரு போருக்கு இடையில் இருக்கிறோம். இது பல உயிர்களுக்கு மேலும் துன்பத்தை விளைவிக்கும், ஆனால் நாங்கள் வெற்றி பெறுவோம். நாங்கள் தயாராகி வருகிறோம். எங்கள் பணயக்கைதிகளை வீட்டிற்கு அழைத்து வருவதே எங்கள் முதல் முன்னுரிமை’ என்றார்.

அதனைத் தொடர்ந்து நேர்காணலில் சில கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், பூமியில் உள்ள ஒவ்வொரு நாடும் இதில் தலையிட்டு, எங்கள் மக்களை மீட்டு வர தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று நினைப்பதாக கூறினார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘அவர்களிடம் (ஹமாஸ்) 36 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் பணயக் கைதிகளாக இருக்கிறார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு நட்பு நாட்டின் ஆதரவுக்கு நன்றியுடன் உணர்கிறேன். இஸ்ரேலுக்காக களமிறங்கி போரிட தயாராக இருக்கிறேன். இஸ்ரேலை வெற்றி பெற செய்ய என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்’ என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்த பெண் விளக்கமறியலில்!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்குத் தங்குமிட வசதிகளை...

25 68f4c824ac515
செய்திகள்இலங்கை

ராகம, படுவத்தை பேருந்து விபத்து: 9 மாணவர்கள் உட்பட 12 பேர் காயம்!

ராகம, படுவத்தை பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒன்பது மாணவர்கள் உட்பட மொத்தம் 12 பேர்...

Landslide Warning 1200px 22 12 25 1000x600 1
செய்திகள்இலங்கை

இலங்கையில் மழை மேலும் அதிகரிக்கும்: 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு

எதிர்வரும் அக்டோபர் 21ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வளிமண்டலவியல்...

25 68efb833da4d2
செய்திகள்இலங்கை

காவல்துறை அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்பு: விசாரிக்க விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரங்கள்

தேசிய காவல்துறை திணைக்களத்தில் உயர் பதவி முதல் பல்வேறு பதவிகளில் உள்ள அதிகாரிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்...