tamilnaadi 103 scaled
உலகம்செய்திகள்

விலையுயர்ந்த நகைகளால் செய்யப்பட்ட இஷா அம்பானியின் ஆடை

Share

விலையுயர்ந்த நகைகளால் செய்யப்பட்ட இஷா அம்பானியின் ஆடை

ஆனந்த் அம்பானி திருமண கொண்டாட்டத்தில் இஷா அம்பானி அணிந்திருந்த விலையுயர்ந்த நகைகளால் செய்யப்பட்ட ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், கடந்த 1 -ம் திகதி குஜராத்தின் ஜாம் நகரில் திருமணத்தின் முந்தய கொண்டாட்டம் தொடங்கியது. இந்த விழாவுக்கு உலக பிரபலங்கள் உள்ளிட்ட 1,000 சிறப்புவிருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், திருமணம விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் விலையுயர்ந்த பாரம்பரியமான ஆடையில் வந்தனர். ஆனால், இஷா அம்பானி அணிந்திருந்த ஆடை சற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அதாவது அவர், வைரம், மரகதம், மாணிக்கக் கற்கள் உள்ளிட்ட பல விலைமதிப்பற்ற கற்கள் அடங்கிய ஜடாவ் நகைகளால் செய்யப்பட்ட ஜாக்கெட்டை அணிந்திருந்தார்.

இது தொடர்பாக ஆடை வடிவமைப்பாளர் அபு ஜானி மற்றும் சந்தீப் கோஸ்லா ஆகியோர் பகிர்ந்துள்ள வீடியோவில், “இஷா அம்பானி ஆடையில் பதிக்கப்பட்ட நகைகள் அவரது தனிப்பட்ட சேகரிப்பில் வந்தவை” என்று கூறியுள்ளனர்.

சிவப்பு துணியை அடித்தளமாக கொண்டு, விலைமதிப்பற்ற ரத்தினக் கற்களால் அலங்கரித்து ஜாக்கெட் தைக்கப்பட்டது. இதனை வடிவமைக்க ஜடாவ் நகைகளை இஷா அம்பானி கொடுத்துள்ளார்.

மேலும் இதில், போல்கி, ரூபி, வைரங்கள், மரகதங்கள் ஆகியவை உள்ளன. இதுபோக, ஆடையில் வைத்து தைப்பதற்காகவே குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருந்து நகைகள் பெறப்பட்டன.

Share

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...