tamilnaadij 2 scaled
உலகம்செய்திகள்

திரவம் நிரப்பிய போத்தல்களில் பிஞ்சு பிள்ளைகளின் சடலம்

Share

திரவம் நிரப்பிய போத்தல்களில் பிஞ்சு பிள்ளைகளின் சடலம்

திரவம் நிரப்பிய கண்ணாடி போத்தல்களுக்குள் இரண்டு குழந்தைகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் பெற்றோர் என்று கருதப்படும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொங்ஹொங்கின் Tuen Mun பகுதியில் காலியாக இருந்த அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு ஆண் குழந்தைகளின் சடலத்தை தனித்தனி கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையில் துப்புரவு பணியாளர் ஒருவர் கண்டெடுத்தார்.

தகவல் அளிந்த பொலிசார் முன்னெடுத்த நடவடிக்கையில் 24 வயது ஆணும் 22 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் தரப்பு தெரிவிக்கையில்,

வெள்ளிக்கிழமை பகல் 10 மணியளவில் குடியிருப்பு உரிமையாளரால் வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த துப்புரவுத் தொழிலாளியால் அந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

இரு கண்ணாடி போத்தல்களில் அடைக்கப்பட்ட நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது. ஆனால் நிரப்பட்ட திரவம் தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், உடலில் வெளிப்படையான காயங்கள் எதுவும் காணப்படவில்லை என்றும், இரண்டு குழந்தைகளின் இறப்புக்கான காரணம் தடயவியல் நோயியல் நிபுணரால் தீர்மானிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Share
தொடர்புடையது
Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...

Israel Iran
உலகம்

ஈரான் பணியும்வரை தாக்குதல் தொடரும் – அமெரிக்காவின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க...