4 19 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் பிடியில் 50 நாட்கள் சிக்கியிருந்த 9 வயது அயர்லாந்து சிறுமி: தந்தை கூறிய அந்த வார்த்தை

Share

ஹமாஸ் பிடியில் 50 நாட்கள் சிக்கியிருந்த 9 வயது அயர்லாந்து சிறுமி: தந்தை கூறிய அந்த வார்த்தை

பிணைக்கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக ஹமாஸ் படைகளின் பிடியிலிருந்து 50 நாட்களுக்கு பின்னர் 9 வயது அயர்லாந்து சிறுமி விடுவிக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து – இஸ்ரேலிய குடிமகளான Emily Hand அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் பிடியில் சிக்கினார். இஸ்ரேல் எல்லையில் இருந்து காஸாவுக்கு பணயக்கைதியாக கொண்டு செல்லப்பட்ட 240 பேர்களில் சிறுமி Emily Hand-ம் ஒருவர்.

இஸ்ரேல் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்ட காஸா பகுதியில் இன்னும் சிறை வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் குறைந்தது 30 குழந்தைகளில் இவரும் ஒருவர்.

இஸ்ரேல் – ஹமாஸ் படைகள் இடையிலான போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியாக தனது மகள் விடுவிக்கப்பட மாட்டார் என்ற அச்சத்தைப் பற்றி அவரது தந்தை முன்பு பேசியிருந்தார்.

எமிலியின் நீலக் கண்கள் என் கண்களைப் பார்ப்பதை நான் பார்க்கும் வரை, நான் எதையும் நம்பப் போவதில்லை என 63 வயதான தாமஸ் ஹண்ட் கண்கலங்கியிருந்தார்.

தற்போது போர் நிறுத்தம் தொடங்கிய இரண்டாவது நாளில் சிறுமி Emily Hand விடுவிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...