3 1 1 scaled
உலகம்செய்திகள்

போருக்கு தயாராகிறதா ஈரான்… 200 ஹெலிகொப்டர்களுடன் தீவிரப்பயிற்சியில் தரைப்படை

Share

போருக்கு தயாராகிறதா ஈரான்… 200 ஹெலிகொப்டர்களுடன் தீவிரப்பயிற்சியில் தரைப்படை

இஸ்ரேல் – ஹமாஸ் போர் இறுகி வரும் நிலையில், தற்போது ஈரானின் தரைப்படை இரண்டு நாட்கள் தீவிரப் பயிற்சிக்கு களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஸா மீதான இஸ்ரேலின் கண்மூடித்தனமான தாக்குதலில் இதுவரை பலியான அப்பாவி மக்களின் எண்ணிக்கை 7,000 கடந்துள்ளது.

இந்த நிலையில், காஸா மீதான போர் தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், அதை மூன்னெடுத்து நடத்தும் அமெரிக்கா அந்த தீயில் இருந்து தப்ப முடியாது என ஈரான் மிரட்டல் விடுத்திருந்தது.

தற்போது தரைப்படையை தயார் படுத்தும் நோக்கில், இரண்டு நாட்கள் தீவிரப் பயிற்சிக்கு களமிறக்கப்பட்டுள்ளது. தரைப்படையுடன் 200 ஹெலிகொப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் காஸா மீது தரைவழித் தாக்குதலை முன்னெடுத்தால், லெபனான் மற்றும் ஈரான் போரில் களமிறங்கும் வாய்ப்புகள் அதிகரித்தே காணப்படுகிறது.

மேலும், ஈரான் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக குறிப்பிட்டே, தரைப்படையின் பயிற்சியை முன்னெடுத்துள்ளது. ஈரானின் 7 மாகாணங்களில் இருந்தும் துருப்புகளும் தளவாடங்களும் பயிற்சிக்கு என திரட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலின் தற்போதைய போக்கு கண்மூடித்தனமானது என உணர்ந்து கொண்ட ஜோ பைடன், தற்போது பாலஸ்தீன மக்களின் உயிர் முக்கியம் என்ற வகையில் கருத்து தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...