24 6625733367cb6 1
உலகம்செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய ஈரானிய இராணுவம் தொடர்பில் தகவல்

Share

இஸ்ரேலை தாக்கிய ஈரானிய இராணுவம் தொடர்பில் தகவல்

கடந்த வாரம் இஸ்ரேல் மீது ஈரான் முன்னோடியில்லாத வகையில் நேரடித் தாக்குதலை நடத்தியமைக்கு ஈரானின் அதியுயர் தலைவர் அயத்துல்லா சையத் அலி உசைனி காமெனி (Sayyid Ali Hosseini Khamenei) பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

ஈரானிய இராணுவத் தளபதிகளுடனான சந்திப்பின்போதே அவர் ஒரு வாரத்திற்குப் பிறகு ஆயுதப் படைகளின் வெற்றியை பாராட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரானால் ஏவப்பட்ட பெரும்பாலான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் சுட்டு வீழ்த்தின. குறித்த தாக்குதல் இஸ்ரேலில் மிதமான சேதத்தை ஏற்படுத்தியது.

 

எத்தனை ஏவுகணைகள் ஏவப்பட்டன, அவற்றில் எத்தனை அவற்றின் இலக்கைத் தாக்கின என்பது முதன்மையான கேள்வி அல்ல, உண்மையில் முக்கியமானது என்னவென்றால், அந்த நடவடிக்கையின் போது ஈரான் தனது சக்தியை வெளிப்படுத்தியது.

 

சமீபத்திய நடவடிக்கையில், ஆயுதப் படைகள் செலவுகளைக் குறைத்து ஆதாயங்களைப் பெருக்க முடிந்தது. இராணுவ அதிகாரிகள், இராணுவ கண்டுபிடிப்புகளை இடைவிடாமல் தொடரவும், எதிரியின் தந்திரங்களைக் கற்றுக்கொள்ளவும் வேண்டும்.

 

சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய துணைத் தூதரகத்தின் மீது ஏப்ரல் 1 அன்று இஸ்ரேலிய தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்பட்டது, இதில் இரண்டு IRGC ஜெனரல்கள் கொல்லப்பட்டனர் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...