இஸ்ரேலுக்கு பைடன் கடும் எச்சரிக்கை

24 663c17531cdd9

இஸ்ரேலுக்கு பைடன் கடும் எச்சரிக்கை

காசா நகரமான ரஃபாவில் (Rafah) பாரிய தரைப்படை நடவடிக்கையை தொடங்கினால் இஸ்ரேலுக்கு (Israel) அமெரிக்கா (America) சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தும் என்று அதிபர் ஜோ பைடன்(Joe Biden) இஸ்ரேலுக்கு (Israel) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அவர்கள் ரஃபாவிற்குள் சென்றால், ரஃபாவைச் சமாளிக்க வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை நான் வழங்கமாட்டேன்,” என்று அவர் CNN க்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.

“இஸ்ரேல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் தொடர்ந்து ஈடுபடுவேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க எதிர்ப்பு இருந்தபோதிலும், இஸ்ரேல் ரஃபாவில் பெரிய அளவிலான படையெடுப்பை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

தெற்கு காசாவின் நெரிசல் நிறைந்த பகுதி ஹமாஸின்(hamas) கடைசி பெரிய கோட்டையாகும். காசாவின் பிற பகுதிகளில் இருந்து வரும் அகதிகளால் மக்கள் தொகை பெருகியிருக்கும் நகரத்தில் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

“நாங்கள் ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை வழங்கப் போவதில்லை” என்று பைடன் பேட்டியில் கூறினார். ரஃபாவின் தற்போதைய நிலைமையை தரைப்படை நடவடிக்கையாக அமெரிக்கா வரையறுக்கவில்லை என்றார்.

“அவர்கள் மக்கள்தொகை மையங்களுக்குள் செல்லவில்லை. அவர்கள் எல்லையில் செய்தது சரியாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

“ஆனால் நான் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் போர் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளேன், உண்மையில் அவர்கள் இந்த மக்கள்தொகை மையங்களுக்குச் சென்றால், அவர்கள் எங்கள் ஆதரவைப் பெறப் போவதில்லை.”

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதை அமெரிக்கா நிறுத்தலாம் என்று அவர் கூறியது இதுவே முதல் முறையாகும்.

Exit mobile version