24 663c17531cdd9
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்கு பைடன் கடும் எச்சரிக்கை

Share

இஸ்ரேலுக்கு பைடன் கடும் எச்சரிக்கை

காசா நகரமான ரஃபாவில் (Rafah) பாரிய தரைப்படை நடவடிக்கையை தொடங்கினால் இஸ்ரேலுக்கு (Israel) அமெரிக்கா (America) சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்தும் என்று அதிபர் ஜோ பைடன்(Joe Biden) இஸ்ரேலுக்கு (Israel) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“அவர்கள் ரஃபாவிற்குள் சென்றால், ரஃபாவைச் சமாளிக்க வரலாற்று ரீதியாகப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை நான் வழங்கமாட்டேன்,” என்று அவர் CNN க்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.

“இஸ்ரேல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதில் தொடர்ந்து ஈடுபடுவேன்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமெரிக்க எதிர்ப்பு இருந்தபோதிலும், இஸ்ரேல் ரஃபாவில் பெரிய அளவிலான படையெடுப்பை நடத்தத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

தெற்கு காசாவின் நெரிசல் நிறைந்த பகுதி ஹமாஸின்(hamas) கடைசி பெரிய கோட்டையாகும். காசாவின் பிற பகுதிகளில் இருந்து வரும் அகதிகளால் மக்கள் தொகை பெருகியிருக்கும் நகரத்தில் ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதால், பொதுமக்கள் பெருமளவில் உயிரிழக்க நேரிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

“நாங்கள் ஆயுதங்கள் மற்றும் பீரங்கி குண்டுகளை வழங்கப் போவதில்லை” என்று பைடன் பேட்டியில் கூறினார். ரஃபாவின் தற்போதைய நிலைமையை தரைப்படை நடவடிக்கையாக அமெரிக்கா வரையறுக்கவில்லை என்றார்.

“அவர்கள் மக்கள்தொகை மையங்களுக்குள் செல்லவில்லை. அவர்கள் எல்லையில் செய்தது சரியாக உள்ளது,” என்று அவர் கூறினார்.

“ஆனால் நான் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மற்றும் போர் அமைச்சரவைக்கு தெளிவுபடுத்தியுள்ளேன், உண்மையில் அவர்கள் இந்த மக்கள்தொகை மையங்களுக்குச் சென்றால், அவர்கள் எங்கள் ஆதரவைப் பெறப் போவதில்லை.”

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்புவதை அமெரிக்கா நிறுத்தலாம் என்று அவர் கூறியது இதுவே முதல் முறையாகும்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...