24 5
உலகம்செய்திகள்

இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுக்கு பில்லியன் டொலர் கடன் வழங்கிய சர்வதேச அமைப்பு

Share

மூழ்கி வரும் பொருளாதாரத்தை சீரமைக்க, பாகிஸ்தானுக்கு ஒரு பில்லியன் டொலர் கடன் வழங்க, சர்வதேச நாணய நிதியம் (IMF) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதல் நேற்று (09) வோசிங்டனில் இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக்குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாகிஸ்தானுக்கு கடன் வழங்கக் கூடாது என்று தமது எதிர்ப்பை இந்தியா முறைப்படி தெரிவித்திருந்தது.

எனினும் இந்தியாவின் எதிர்ப்பை புறக்கணித்து சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானுக்கு கடனை வழங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடம், மூழ்கி வரும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 1 பில்லியன் டொலர் கடனை பாகிஸ்தான் கோரியிருந்தது.

இந்தநிலையில் வழங்கப்படும் நிதியை பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் பயன்படுத்துவதாக, இந்தியா குற்றம் சுமத்தியிருந்தது.

இருப்பினும், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, பாகிஸ்தானுக்கு 1 பில்லியன் டொலர் கடன் கொடுக்க ஐ.எம்.எப்., சம்மதம் தெரிவித்ததாக, பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இதற்காக பாகிஸ்தான் பிரதமர் சபாஸ் செரீப் சர்வதேச நாணய நிதியத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...