சிறுபான்மை என்று கூறினால் செருப்பால் அடிப்பேன்! கொந்தளித்த சீமான்
உலகம்செய்திகள்

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

Share

சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டில் தமிழர் எழுச்சி கட்சி சார்பில் நடந்த கூட்டம் ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசிய நியூட்டிரினோ திட்டம், 8 வழிச்சாலை, மணிப்பூர், நாகலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் சூழல் போன்ற கருத்துக்கள் சர்ச்சையை கிளப்பியது.

அத்துடன் இணையத்திலும் அவர் பேசிய வீடியோ வைரலானது. அதன் பின்னர் சீமான் இரு பிரிவினர் இடையே மோதலை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக தரமணி பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சீமான் மனுதாக்கல் செய்தார்.

ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. இந்த நிலையில் சீமான் தாக்கல் செய்த வழக்கு, இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு நீதிபதி இடைக்கால தடை விதித்தார். அத்துடன் அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கும் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

நாம் தமிழர் சீமான் பொதுக் கூட்டங்களில் ஆவேசமாக பேசுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதால், பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...