download 4
உலகம்

அமெரிக்கா வரிசையில் இடம் பிடிக்க காத்திருக்கும் இந்தியா

Share

அமெரிக்கா வரிசையில் இடம் பிடிக்க காத்திருக்கும் இந்தியா

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக இந்தியாவின் ஆதித்யா எல்1 என்ற விண்கலத்துடன் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் வெற்றிகரமாக நேற்று விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

இந்த செயலானது வெற்றிகரமாக நடந்து முடிந்தால் உலக நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு தனிஇடம் கிடைக்கும் எனலாம்.

ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து காலை 11.50 மணி அளவில் இந்தியாவின் ஆதித்யா எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி 57 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது.

ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த திட்டத்தின் இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி பொறுப்பெடுத்துள்ளார். இந்தியா சார்பில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான் என்ற பெருமையை ஆதித்யா எல் 1 பெறும்.

இதையடுத்து விஞ்ஞானி சோம்நாத் மற்றும் சோம்நாத் வாழ்த்து வெற்றியை நினைத்து தனது கருத்துகைளயும் தெரிவித்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

12 15
உலகம்செய்திகள்

40 ஆண்டு ஆயுதப்போராட்டதை கைவிடும் குர்திஸ் கிளர்ச்சியாளர்கள்

துருக்கியின் அரசாங்கங்களுக்கு எதிராக, 40 ஆண்டு காலமாக ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குர்தீஸ் கிளர்ச்சியாளர்கள்,...