24 6639985c5e4a5
உலகம்செய்திகள்

மாலைத்தீவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்திய படையினர்

Share

மாலைத்தீவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்திய படையினர்

மாலைத்தீவில் (Maldives) நிலைகொண்டிருந்த 51 இந்திய படைவீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மாலைத்தீவு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்திய (India) ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான பேச்சாளர், குறித்த படையினர் நாடு திரும்பியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், மாலைத்தீவில் நிலைகொண்டிருக்கும் இந்திய வீரர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.

அதேவேளை, மாலைத்தீவில் உள்ள டோர்னியர் விமானம் மற்றும் உலங்கு வானூர்திகளை நிர்வகிப்பதற்கு இந்தியாவிலிருந்து சிவிலியன் நிபுணர்களை பணியமர்த்துவதற்காக இரண்டு நாடுகளும் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், மாலைத்தீவிலிருந்து இந்திய படையினர் திருப்பி அனுப்பப்பட்டதற்கு காரணம் அந்நாட்டு ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரத்தின் ஒரு மூலக்கல்லாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.

இதன்படி, மாலைத்தீவு ஜனாதிபதியின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து உடனடியாக இந்திய இராணுவ படையினரை திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...