24 65b8b5e815573
உலகம்செய்திகள்

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

Share

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் இருந்து 19 பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை

சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய மீன்பிடிக் கப்பலையும் அதிலிருந்த 19 பாகிஸ்தானியர்களையும் இந்திய கடற்படையினர் மீட்டனர்.

இந்திய கடற்படை இரண்டு நாட்களுக்குள் மற்றொரு மாபெரும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

கொச்சியில் இருந்து 800 மைல் தொலைவில் கடற்கொள்ளையர்களின் வசம் இருந்த Al Naeemi எனும் ஈரானிய மீன்பிடி கப்பலை மீட்டது.

INS Sumitra என்ற போர்க்கப்பல் மூலம் மீட்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

கடத்தப்பட்ட கப்பலில் 19 பாகிஸ்தான் மாலுமிகள் இருந்தனர். அவர்கள் அனைவரையும் மீட்டுவிட்டதாக இந்திய கடற்படை அறிவித்துள்ளது.

மேலும் கப்பலில் இருந்த 11 சோமாலிய கடற்கொள்ளையர்களையும் இந்திய கடற்படை வீரர்கள் கைது செய்தனர்.

இந்த மீட்பு பணியில் இந்திய கடற்படையின் மரைன் கமாண்டோக்கள் கலந்து கொண்டனர்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய போர்க்கப்பல்கள் எப்போதும் எச்சரிக்கையுடன் இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோமாலியாவின் கிழக்குக் கடற்கரையில் உள்ள ஏடன் வளைகுடாவில் கடற்கொள்ளையர் எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் ரோந்துப் பணிகளுக்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் சுமித்ராவை அனுப்பியுள்ளது.

சில நாட்களுக்கு முன், FV Iman என்ற மற்றொரு ஈரானிய மீன்பிடி கப்பல், கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் ஐஎன்எஸ் சுமித்ரா மீட்பு பணியை மேற்கொண்டது.

Share

Recent Posts

தொடர்புடையது
25 6908adfc6e76f
செய்திகள்இலங்கை

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தைத் தடுக்க, சிறார்களுக்குப் பாலியல் கல்வித் திட்டம் அவசியம்: பிரதமர் ஹரிணி அமரசூரிய!

பாலியல் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாப்பதற்காக, அவர்களுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வித்...

Sri Lankas apparel export
செய்திகள்இலங்கை

ஆடைக் கைத்தொழில் துறையினர் 2026 பட்ஜெட்டை வரவேற்கின்றனர்: ஆனால் நிலையான கொள்கை அமுலாக்கம் அவசியம்!

இலங்கையின் மிகப்பெரிய தொழில்துறை மற்றும் ஏற்றுமதி வருமான ஆதாரமான ஆடைத் தொழில்துறை, 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின்...

siemens healthineers insights series 43 digital platforms in healthcare
இலங்கைசெய்திகள்

இலங்கையின் இலவச சுகாதார சேவை டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது: அடுத்த 10 ஆண்டுகளுக்கான மூலோபாயத்தை வகுக்க வழிகாட்டுதல் குழு ஸ்தாபனம்!

இலங்கையின் இலவச சுகாதார சேவையை முழுமையாக டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்காக, சுகாதார மற்றும் பொது ஊடக...

ananda wijepala
செய்திகள்இலங்கை

நுவரெலியா மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரிகள் எவருமில்லை: அநுராதபுரத்தில் 7,100 பேர் – அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தகவல்!

இலங்கையில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே எந்தவொரு சிவில் பாதுகாப்பு சேவை அதிகாரியும் சேவையில் இல்லை என்று...