7 11
உலகம்செய்திகள்

அதிகரித்து வரும் போர் பதற்றம்! தாக்குதலை தொடங்கிய இந்திய கடற்படை

Share

அண்டை நாடான பாகிஸ்தானின் தாக்குதலுக்குப் பிறகு, அரேபிய கடலில் பல இலக்குகளுக்கு எதிராக இந்திய கடற்படை பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன்.

ஜம்மு, பதான்கோட், உதம்பூர் மற்றும் வேறு சில இடங்களில் உள்ள இந்திய இராணுவ இலக்குகளை தாக்க பாகிஸ்தானின் முயற்சித்ததாகவும், அதனை ட்ரோன்கள் மூலம் இந்தியா முறியடித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கும் முகமாக இந்திய கடற்படை தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சிகளுக்குப் பிறகு, “தனது இறையாண்மையைக் காக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது” என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கராச்சி துறைமுகத்தை குறிவைத்து இந்தியா குறிப்பிடத்தக்க இராணுவ நடவடிக்கையை இதன்மூலம் மேற்கொண்டுள்ளது.

நேற்று இரவு தெற்கு பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் உள்ள துறைமுகப் பகுதிக்கு அருகில் பலத்த வெடிச்சத்தங்கள் கேட்டதாகவும், 1971 ஆம் ஆண்டு போருக்குப் பிறகு இந்திய கடற்படை பாகிஸ்தானுக்கு எதிராக நேரடிப் போர்முனையைத் திறந்திருப்பது இதுவே முதல் முறை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானின் எரிபொருள் இருப்புக்கள் மற்றும் கடற்படை சொத்துக்கள் பெருமளவில் இதன்போது சேதமடைந்ததாக இந்திய தரப்பு தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
40
உலகம்செய்திகள்

போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இந்திய – பாகிஸ்தான்..! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்

இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...

37
இலங்கைசெய்திகள்

இலங்கையில் கடவுச்சீட்டு பெற மீண்டும் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திற்கு அருகில் நேற்று முதல் நீண்ட வரிசைகள்...

38
இலங்கைசெய்திகள்

மொட்டு கட்சியில் மாற்றம்..! முக்கிய பதவிக்கு புதிய நியமனம்

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயற்பாட்டு பிரதானி பதவிக்கு முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ...

36
இலங்கைசெய்திகள்

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்: பிரதமர் தலைமையில் முக்கிய சந்திப்பு Prime Minister Meeting Kotahena Student Death

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி தொடர்பிலான விசாரணைகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் ஹரிணி அமரசூரிய, பொலிஸ்...