8 5
உலகம்செய்திகள்

இந்துக்களை பிளவுபடுத்தும் ஜஸ்டின் ட்ரூடோ: முன்வைக்கப்பட்ட விமர்சனம்

Share

இந்துக்களை பிளவுபடுத்தும் ஜஸ்டின் ட்ரூடோ: முன்வைக்கப்பட்ட விமர்சனம்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் வாழும் இந்து மக்களை பிளவுபடுத்துவதாக இந்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு விமர்சனமொன்றை முன்வைத்துள்ளார்.

கனடா ஒன்ராறியோவின் அமைந்துள்ள இந்துக்கோவில் ஒன்றின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு வன்முறை வெடித்தது.

குறித்த தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்ட ரவ்நீத் சிங் பிட்டு, கனேடிய பிரதமர் அந்நாட்டில் வாழும் இந்துக்களை பிளவுப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவில் வாழும் பல்வேறு சமூகங்களுக்கிடையிலும் ட்ரூடோ பிரிவினையை ஏற்படுத்தியுள்ளதாக ரவ்நீத் சிங் பிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன், கனேடிய நாட்டின் பொலிஸார் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கே சார்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்துக்கோவில்கள் தகர்க்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ள அவர், இந்த சம்பவத்திற்கு பிறகு கனடா நாட்டிற்கும், அந்நாட்டு பிரதமருக்கும் இதுகுறித்து கருத்துக்கூற தகுதியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...