8 5
உலகம்செய்திகள்

இந்துக்களை பிளவுபடுத்தும் ஜஸ்டின் ட்ரூடோ: முன்வைக்கப்பட்ட விமர்சனம்

Share

இந்துக்களை பிளவுபடுத்தும் ஜஸ்டின் ட்ரூடோ: முன்வைக்கப்பட்ட விமர்சனம்

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவில் வாழும் இந்து மக்களை பிளவுபடுத்துவதாக இந்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு விமர்சனமொன்றை முன்வைத்துள்ளார்.

கனடா ஒன்ராறியோவின் அமைந்துள்ள இந்துக்கோவில் ஒன்றின் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால் அங்கு வன்முறை வெடித்தது.

குறித்த தாக்குதலுக்கு கண்டனம் வெளியிட்ட ரவ்நீத் சிங் பிட்டு, கனேடிய பிரதமர் அந்நாட்டில் வாழும் இந்துக்களை பிளவுப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவில் வாழும் பல்வேறு சமூகங்களுக்கிடையிலும் ட்ரூடோ பிரிவினையை ஏற்படுத்தியுள்ளதாக ரவ்நீத் சிங் பிட்டு குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன், கனேடிய நாட்டின் பொலிஸார் காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கே சார்பாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்துக்கோவில்கள் தகர்க்கப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ள அவர், இந்த சம்பவத்திற்கு பிறகு கனடா நாட்டிற்கும், அந்நாட்டு பிரதமருக்கும் இதுகுறித்து கருத்துக்கூற தகுதியில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
aswesuma
செய்திகள்இலங்கை

அஸ்வெசும திட்டத்தில் பயன்பெறுவோர் கவனத்திற்கு: வருடாந்த தகவல் புதுப்பிப்பு ஆரம்பம்; டிசம்பர் 10 கடைசித் தேதி!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து...

anura sri lanka president
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதியுடன் தமிழ், முஸ்லிம் கட்சித் தலைவர்கள் சந்திப்பு: ‘இனவாத வலைக்குள் நாடு சிக்காது’ – அநுரகுமார திசாநாயக்க உறுதி!

அனைத்து மத மற்றும் கலாசார அடையாளங்களையும் மதித்து, இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் சுதந்திரமாக வாழ...

25 6921dea82dcb6
உலகம்செய்திகள்

வரி விதிப்பு வழக்கு: டொனால்ட் ட்ரம்ப் கடும் நெருக்கடியில் – உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்கி அவசர நடவடிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், சர்வதேச வர்த்தக வரி விதிப்பு தொடர்பான ஒரு முக்கிய...

images 4
செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகப்படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு நீதி வேண்டும்” – பாராளுமன்றத்தில் துரைராசா ரவிகரன் வலியுறுத்தல்!

கடந்த போர்க்காலத்தில் இடம்பெற்ற ஊடகப்படுகொலைகள் உள்ளிட்ட ஊடக அடக்குமுறைகளுக்கு இந்த அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்க...