1 21 scaled
உலகம்செய்திகள்

லொட்டறியில் பெருந்தொகை பரிசை அள்ளி கண்கலங்கிய இந்தியர்

Share

லொட்டறியில் பெருந்தொகை பரிசை அள்ளி கண்கலங்கிய இந்தியர்

இந்தியாவின் மராட்டிய மாகாணத்தை சேர்ந்த நபர் பிழைப்புக்காக ஐக்கிய அமீரகம் சென்றிருந்த நிலையில், நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு நெகிழ்ச்சி திருப்பமாக லொட்டறியில் ரூ.55 லட்சம் வென்றுள்ளார்.

மராட்டிய மாகாணம் மும்பை நகரை சேர்ந்தவர் அலெக்ஸ் சேவியர் பெர்னாண்டஸ். கடந்த 1996ல் பிழைப்புக்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சென்றுள்ளார். துபாய் மாகாணத்தில் புதிய வாழ்க்கையை தேடிய அவருக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு சேவை நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்துள்ளது.

தற்போது, நீண்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு, நெகிழ்ச்சி திருப்பமாக MEGA7 லொட்டறியில் இரண்டாவது பரிசாக Dh250,000 அள்ளியுள்ளார். இதற்கு முன்னர் பலமுறை சிறிய தொகைகளை லொட்டறியில் வென்றிருந்தாலும், பெருந்தொகையை பரிசாக வெல்வது இதுவே முதல்முறை என தெரிவித்துள்ளார்.

லொட்டறி நிர்வாகத்திடம் இருந்து அழைப்பு வந்த அடுத்த சில நிமிடங்களில் தமது அன்பு மனைவிக்கு தெரியப்படுத்தியதாகவும், அந்த தொகையை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே முடிவு செய்வார் எனவும் அலெக்ஸ் சேவியர் பெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.

MEGA7 லொட்டறியில் முதல் பரிசான ரூ.226 கோடியை இதுவரை தனியாகவோ, குழுவாகவோ மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாட்டவர்களில் எவரும் வென்றதில்லை என்றே கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Drug
உலகம்உலகம்

பதின் பருவத்தை கடந்த இளையவர்களை அதிகம் காவு வாங்கும் போதைப்பொருள் – ஜேர்மனியில் அதிர்ச்சி.

  போதைப்பொருட்களால் பலியாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் விடயம் ஜேர்மனியில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அண்மையில், தலைநகர்...

gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...

Israel Iran
உலகம்

ஈரான் பணியும்வரை தாக்குதல் தொடரும் – அமெரிக்காவின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க...