24 66358cc1d60ae
உலகம்செய்திகள்

கனடா சென்ற இந்திய தம்பதியருக்கு விபரீதம்

Share

கனடா சென்ற இந்திய தம்பதியருக்கு விபரீதம்

கனடாவில்(Canada) இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்த தம்பதியினர் இந்தியாவை சேர்ந்தவர்களென அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் குறித்த இந்திய தம்பதியர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா – ஒன்ராறியோவிலுள்ள கிளாரிங்டன் (Clarington) என்னுமிடத்தில், மதுபானக்கடை ஒன்றில் திருட முயன்ற நபரை பொலிஸார் பிடிக்க சென்ற வேளை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது, எதிர் திசையில் இருந்து வந்த கார் ஒன்றின் மீது சந்தேகநபர் பயணித்த வான் மோதியதில் காரில் பயணித்த இந்திய தம்பதியர் மற்றும் குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் வானை ஓட்டிவந்த சந்தேகநபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் 60 மற்றும் 55 வயதுடைய இந்தியத் தம்பதியரும், அவர்களுடைய பேரனான மூன்று மாதக் குழந்தையும் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் ஒன்ராறியோவிலுள்ள Ajax இல் வசித்துவரும் குழந்தையின் பெற்றோரான 33 மற்றும் 27 வயதுடைய தம்பதியும் அதே காரில் பயணித்துள்ளதுடன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் உயிரிழந்த குழந்தையின் தாயின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 5 5
செய்திகள்இலங்கை

திருமலை புத்தர் சிலை அகற்றம்: அமைதியின்மை குறித்துப் பொலிஸ் அறிக்கை – “சமாதானத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் அகற்றினோம்” என விளக்கம்!

திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரைப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை ஒன்றை அகற்றியமை...

images 4 6
செய்திகள்இலங்கை

இலங்கையில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: வீட்டு வன்முறை உச்சம்!

2024 நவம்பர் மாதம் முதல் இவ்வாண்டு ஒக்டோபர் மாதம் வரை மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவல்கள்...

images 3 6
செய்திகள்இலங்கை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறிய 31 தமிழக மீனவர்களுக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிப்பு!

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட 31 தமிழக கடற்றொழிலாளர்களுக்கு பருத்தித்துறை நீதிமன்றம் 10...

25 691abc1d14e03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 13 வயது மகள் விளக்கமறியலில்!

பதுளைப் பிரதேசத்தில், தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தாயின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த...