24 660eeb8e072ce
உலகம்செய்திகள்

இந்தியாவில் தடம்பதிக்கவுள்ள டெஸ்லா!

Share

இந்தியாவில் தடம்பதிக்கவுள்ள டெஸ்லா!

இந்தியாவுக்கு (India) ஏற்றுமதி செய்வதற்காக ஜெர்மனியில் (Germany) உள்ள டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் ஆலையில் மகிழுந்து உற்பத்தி ஆரம்பமாகியுள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் இந்தியாவுக்கான மகிழுந்து ஏற்றுமதி நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக டெஸ்லா நிறுவனத்தின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உலகின் மூன்றாவது பெரிய மகிழுந்து சந்தையைக் கொண்டுள்ள இந்தியாவில், டெஸ்லா விரைவில் களமிறங்கவுள்ளது.

இதற்காக சுமார் 2 பில்லியன் டொலர் பணத்தை டெஸ்லா முதலீடு செய்யும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் மகிழுந்து உற்பத்தி ஆலை அமைப்பதற்குப் பொருத்தமான தளங்களை ஆய்வு செய்வதற்காக டெஸ்லாவின் குழு இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு பயணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கடந்த மாதம் சில மின்சார வாகன உற்பத்தியாளர்களின் இறக்குமதி வரியைக் குறைக்க முன்வந்தது.

இந்தியாவில் குறைந்தபட்சம் 500 மில்லியன் டொலர் முதலீடு செய்து, மூன்று ஆண்டுகளுக்குள் உற்பத்தியைத் தொடங்கினால், வரி குறைப்பு செய்யப்படும் என மத்திய அரசு கூறியது.

டெஸ்லா நிறுவனம் பல மாதங்களாக இந்தியாவின் இறக்குமதி வரி வீதம் குறைக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையில், மத்திய அரசு இந்த சலுகையைக் கொடுக்க முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், டெஸ்லா எந்த வகையான மகிழுந்தை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளது என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை.

ஜெர்மனியின் பெர்லினுக்கு அருகிலுள்ள டெஸ்லாவின் தொழிற்சாலையில் வை (Y) வகை மகிழுந்து மட்டுமே தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவின் புதிய கொள்கையின்படி, வாகன உற்பத்தி நிறுவனங்கள் குறைந்த வரி வீதத்தில் ஆண்டுக்கு 8 ஆயிரம் கார்களை இறக்குமதி செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...