4 6 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்க இந்தியா அதிரடி நடவடிக்கை

Share

இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்க இந்தியா அதிரடி நடவடிக்கை

இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்கும் ஆபரேஷன் அஜய் என்ற திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படைக்கும் இடையே 6வது நாளாக போர் நடைபெற்று வருகிறது.

ஹமாஸ் அமைப்பினர் தொடர்ச்சியாக ராக்கெட் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஆபத்தான பகுதியில் உள்ள மக்கள் பதுங்கு குழிகள் மற்றும் பாதுகாப்பான பகுதியில் இருக்குமாறு இஸ்ரேலிய அரசு அறிவுறுத்தி வருகிறது.

போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு உலக நாடுகளும் இஸ்ரேலில் உள்ள தங்கள் குடிமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் இஸ்ரேலில் சிக்கியுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள 18,000 இந்திய குடிமக்களை மீட்க இந்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை இன்று தொடங்கியுள்ளது.

இது தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் X தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்திய தூதரகத்தில் ஏற்கனவே பதிவு செய்து இருந்தவர்கள் தாய் நாட்டிற்கு திரும்ப விரும்பினால் அவர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதற்கான “ஆபரேஷன் அஜய்” என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காக சிறப்பு விமானங்கள் மற்றும் மற்ற பிற ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாகவும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
8 9
இலங்கைசெய்திகள்

இசைப்பிரியா – பாலச்சந்திரன் படுகொலை விவகாரம் : சட்ட நடவடிக்கைக்கு அஸ்திவாரம்!

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரன் ஆகியோரின் மரணம் தொடர்பான முறைப்பாடு கொழும்பில் பொலிஸ் தலைமையகத்தில் உள்ள சட்டப்...

7 12
இலங்கைசெய்திகள்

ஷிரந்தியை காப்பாற்ற தேரர்களை நாடும் மகிந்த! போலி செய்தி தொடர்பில் வெளியான அறிக்கை

தனது மனைவி ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி தற்போதைய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு அழுத்தம்...

6 17
இந்தியாசெய்திகள்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம் : வெளியான மற்றுமொரு தகவல்

விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்திலிருந்து பதிவு செய்யப்பட்ட தரவை புலனாய்வாளர்கள் பதிவிறக்கம் செய்துள்ளதாக இந்திய சிவில்...

5 16
இலங்கைசெய்திகள்

அரசாங்க பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

அரசாங்க பாடசாலைகளில் ஒரு பாடத்திற்கான கற்பித்தல் நேரத்தை 45 நிமிடங்களிலிருந்து 50 நிமிடங்களாக அதிகரிப்பது குறித்து...