2 3
உலகம்செய்திகள்

முழு அளவிலான போருக்கு தயாராகும் இந்தியா : எழுந்துள்ள அச்சம்

Share

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது, முழு உலகிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முழுமையான போராக வெடிக்கலாம் என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் காஸ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, தீவிரவாதிகளின் ஆதரவாளர்களே மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்தியா,அவர்களையே குறிவைப்பதால், உடனடியாக பாகிஸ்தானுக்கு எதிராக முழு அளவில் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகள், பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்கள் என்பதற்கு, தொழில்நுட்பம், நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் காது சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா கூறுகிறது.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளது. எனினும்கூட. தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிப்பதாக குற்றம் சாட்டும் இந்தியா, அந்த நாட்டுக்கு பதிலடி கொடுக்க இன்னும் உறுதியாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அது ஒரு முழுமையான போருக்கு இடமளிக்காமல் அளவிடப்பட்ட பதிலடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

துபாயில் பாதுகாப்பு நடவடிக்கை: சிதறி விழுந்த பாகங்களால் இலங்கையர் உட்பட நால்வர் காயம்!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் மேற்கொள்ளப்பட்ட ஒரு வெற்றிகரமான பாதுகாப்பு இடைமறிப்பு நடவடிக்கையின்போது (Interception),...

Untitled 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி ரயில் நிலையத்தில் திடீர் தீ விபத்து: நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்தன!

காலி (Galle) ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பயன்பாட்டில் இல்லாத இரண்டு ரயில் பெட்டிகள்...

Untitled 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை சுற்றுலாவை மேம்படுத்த அதிரடி நடவடிக்கை: 39 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அமைச்சரவை அனுமதி!

நாட்டின் சுற்றுலாத் துறையை சர்வதேச மட்டத்தில் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடுகளைச் சேர்ந்த...

Untitled 1
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் 16 வயது சிறுமி கத்தியால் குத்திக்கொலை: மூன்று இளைஞர்கள் மீது குற்றச்சாட்டு!

பிரித்தானியாவின் லீட்ஸ் (Leeds) நகரில் 16 வயது சிறுமி குளோயி வாட்சன் டிரான்ஸ்ஃபீல்ட் (Chloe Watson...