2 3
உலகம்செய்திகள்

முழு அளவிலான போருக்கு தயாராகும் இந்தியா : எழுந்துள்ள அச்சம்

Share

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் ஆரம்பிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இது, முழு உலகிற்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு முழுமையான போராக வெடிக்கலாம் என்ற அச்சமும் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் காஸ்மீரில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை, தீவிரவாதிகளின் ஆதரவாளர்களே மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள இந்தியா,அவர்களையே குறிவைப்பதால், உடனடியாக பாகிஸ்தானுக்கு எதிராக முழு அளவில் தாக்குதல்கள் எதனையும் மேற்கொள்ளாது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகள், பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்கள் என்பதற்கு, தொழில்நுட்பம், நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் காது சாட்சிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நம்பகமான ஆதாரங்கள் இருப்பதாக இந்தியா கூறுகிறது.

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளது. எனினும்கூட. தீவிரவாதிகளை பாகிஸ்தான் ஆதரிப்பதாக குற்றம் சாட்டும் இந்தியா, அந்த நாட்டுக்கு பதிலடி கொடுக்க இன்னும் உறுதியாகவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, அது ஒரு முழுமையான போருக்கு இடமளிக்காமல் அளவிடப்பட்ட பதிலடியாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...