11 4
உலகம்செய்திகள்

இந்திய – பாகிஸ்தான் பதற்ற நிலை : இலங்கையின் அணிசேரா பங்கை எதிர்பார்க்கும் பாகிஸ்தான்

Share

காஸ்மீர் பஹல்காம் தாக்குதல் விடயத்தில், இலங்கை நடுநிலையான, அணிசேரா பங்கை வகிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் எதிர்பார்ப்பதாக கொழும்பின் ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இராஜதந்திர தரப்பை கோடிட்டு இந்த செயதியை குறித்த ஊடகம் வெளியிட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதலை அடுத்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் பேசிய பின்னர், ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையின் அம்சங்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கவனத்தில் கொண்டுள்ளனர்.

இந்தநிலையில், 2025 மார்ச் 11, அன்று பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், பயணிகள் தொடருந்தை பலுச் பிரிவினைவாதிகள் கடத்திய சம்பவம் தொடர்பில், இலங்கை ஜனாதிபதி தமது நடுநிலைமையைக் காட்டாதது ஏன் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கவலை கொண்டுள்ளதாகவும் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தான் எந்த வடிவத்திலும் பயங்கரவாதத்தை மன்னிக்கவில்லை என்று வலியுறுத்தியுள்ள குறித்த இராஜதந்திர தரப்பு, பஹல்காமில் என்ன நடந்தது என்பது குறித்து சர்வதேச விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

சிந்து நதி நீரை அதன் விவசாயத்திற்காக நிறுத்தி வைத்தால் பாகிஸ்தான் இராணுவ ரீதியாக பதிலளிக்கும் என்று தரப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்திய-பாகிஸ்தான் விடயத்தில் தமது நாடு நடுநிலையாக செயற்படும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...