10 13
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் தளங்கள் மீது இந்தியா ஏவுகணை தாக்குதல்!

Share

இந்தியா – பாகிஸ்தான் முறுகல் நிலையின் சமீபத்திய தாக்குதல்களில் இந்தியப் படைகளால் மூன்று விமானப்படைத் தளங்கள் குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தானின் இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தியதுடன், பஞ்சாப் மாகாணத்தின் ஷோர்கோட்டில் அமைந்துள்ள ரஃபிகி விமானப்படை தளத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தலைநகரான லாகூரிலிருந்து சுமார் 250 கி.மீ (150 மைல்) தொலைவில் உள்ளது என்று பாகிஸ்தான் விளக்கமளித்துள்ளது.

தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து சுமார் 120 கி.மீ (75 மைல்) தொலைவில் அமைந்துள்ள சக்வால் நகரில் உள்ள முரித் விமானப்படை தளத்தில் மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்களை குறிவைக்க இந்தியா விமானங்களில் இருந்து ஏவுகணைகளை தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இராணுவ அமைப்புக்கள் அனைத்து சொத்துக்களும் பாதுகாப்பாக உள்ளனதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
10 18
உலகம்செய்திகள்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக...

8 18
இலங்கைசெய்திகள்

சாட்டையைக் கையில் எடுத்துள்ள ஜனாதிபதி! அமைச்சர்கள் சிலருக்கு கட்டுப்பாடு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடுமையான அதிருப்தி...

9 18
இலங்கைசெய்திகள்

மாணவியை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் கைது

மாணவி ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தெவினுவர பிரதேசத்தைச்...

7 18
உலகம்செய்திகள்

கூகுள் நிறுவனத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

கூகுள் நிறுவனத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, 1.4 பில்லியன் டொலர் அபராதம்...