செய்திகள்உலகம்

அதிகரித்துள்ள மசூதித் தாக்குதல்கள் – நைஜீரியாவில் 18 பேர் சாவு

Nigeria
Nigeria
Share

நைஜீரியாவில் உள்ள மசூதியில் இடம்பற்ற துப்பாக்கி சூட்டில் 18பேர் சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரியாவின் மஷேகு பிரதேசத்தில் மசாகுகா கிராமத்தில் உள்ள மசூதியில் மக்கள் பலர் நேற்று அதிகாலை தொழுகையில் ஈடுபட்ட வேளையில் மசூதியை சுற்றி வளைத்த மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் சுமார் 18 கிராம மக்கள் சாவடைந்துள்ளனர் .

நைஜீரியாவில் இன வன்முறை பல நூற்றாண்டுகளாக இடம்பெற்று வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான பேர் சாவடைந்துள்ளனர்.

இச் சம்பவத்தால் நைஜீரியாவின் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பதற்றமான நிலை சூழ்ந்துள்ளது . குறிப்பாக, வடமேற்கு மாநிலங்களில் இதுபோன்ற வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

இதை போன்று ஒரு வாரத்திற்கு முன்பு வடமேற்கு சோகோடோ மாநிலத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மசூதியில் தாக்குதல் மக்கள் மத்தியில் பெரு அச்சத்தை ஏற்படுத்தயுள்ளது.

இதுகுறித்து அந்த மாநிலபொலிஸ் அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,

திடீரென மசூதியை சுற்றி வளைத்த தீவிரவாதிகள் தொடர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகவும் அதில் 18 பேர்சாவடைந்ததாகவும் 4 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார் .

மேலும் இந்த தாக்குதல் கிராம மக்களுக்கும் புலானி கால்நடை மேய்ப்பாளர்க்கும் இடையிலான மோதலாக இருக்குமென சந்தேகிக்கப்படுகின்றோமெனவும் தெரிவித்தார் .

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 3
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்மைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம் என...

22 5
இலங்கைசெய்திகள்

யாழில் ஆலயத்திற்கு அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயம்

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு தென்னிலங்கையில் இருந்து அழைத்து வரப்பட்ட யானை மிரண்டதால் இருவர் காயமடைந்த...

21 6
இலங்கைசெய்திகள்

வடக்கு – கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன.. சிறீதரன் தெரிவிப்பு

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள 5,700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக...

24 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற பேரம் பேசும் அரசாங்கம்! நாடாளுமன்றில் பகிரங்க குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள பல உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம்...