செய்திகள்உலகம்

நான் உயிரோடு தான் உள்ளேன் -மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா

nisha
nisha
Share

நான் உயிரோடு தான் உள்ளேன் என மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்திய இளம் மல்யுத்த வீராங்கனை நிஷா தாஹியா மற்றும் அவரது சகோதரர் அடையாளம் தெரியாத கொலையாளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில்,  அது போலியான செய்தி என்றும், தான் உயிரோடு இருப்பதாகவும் காணொளி ஒன்றை நிஷா தாஹியா வெளியிட்டுள்ளார்.

“நான் நலமாக இருக்கிறேன். தற்போது தேசிய சீனியர் போட்டியில் விளையாடுவதற்காக கோண்டா (GONDA) நகருக்கு வந்துள்ளேன்.

நான் கொல்லப்பட்டதாக வரும் செய்தி போலியானது” என அவர் அந்த காணொளியில் தெரிவித்துள்ளார்.

இதனை இந்தியா மல்யுத்த கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த வெள்ளி அன்று செர்பியாவில் நடைபெற 23 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 72 கிலோ எடைப்பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார் அவர் முன்னதாக அவர் சோனிபட் பகுதியில் அமைந்துள்ள சுஷில் குமார் மல்யுத்த அகாடமியில் பயிற்சியை முடித்து கொண்டு வீடு திரும்பும் போது சுட்டுக் கொல்லப்பட்டார் என போலி செய்தி பரவி இருந்தது.

இச்செய்தியால் இந்திய மக்கள் பலரும் துயரத்தில் மூழ்கிய நேரத்தில் நிஷா தாஹியா வெளியிடட காணொளியால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...