tamilni Recovered 7 scaled
உலகம்செய்திகள்

ஹமாஸ் தாக்குதலை நான் நியாயப்படுத்தவில்லை: ஐ நா பொதுச்செயலாளர்

Share

ஹமாஸ் தாக்குதலை நான் நியாயப்படுத்தவில்லை: ஐ நா பொதுச்செயலாளர்

ஹமாஸ் தொடர்பான தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலிய ராணுவ படையினருக்கும் இடையே போர் தாக்குதலானது 3 வது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த போர் நடவடிக்கையில் மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கும், மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் போர் குறித்து தெரிவித்த கருத்து வைரலானது.

அதில், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல் ஒரு எதிர்வினை தான் என அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இதனால் இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு தரப்பினர் மத்தியில் கடும் கோபத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் ஹமாஸ் தொடர்பான தன்னுடைய வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஹமாஸ் படையினரின் பயங்கரவாதத்தை தான் நியாயப்படுத்தவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான தகவல்கள் முழுவதும் பொய், உண்மையில் நான் எதிர் மாறான கருத்தை தான் கூறினேன் என்று ஐ நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்தாக பிபிசி குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விசா பெற்றுத் தருவதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி: தனியார் நிறுவன இயக்குநர் கைது

வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா விசாக்களைப் பெற்றுத் தருவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து சுமார் 35.8 மில்லியன்...

world 46
செய்திகள்உலகம்

ஜெப்ரி எப்ஸ்டீனின் தற்கொலை குறிப்பு வெளியீடு: எவ்வித ஆதாரங்களும் கண்டறியப்படவில்லை என நீதிபதி அறிவிப்பு

பாலியல் குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்க கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன், கடந்த 2019-ஆம் ஆண்டு...

world 41
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாத்தறையில் நிதி மோசடியில் ஈடுபட்ட 6 வெளிநாட்டினர் கைது: விசா விதிமீறல் தொடர்பாக பொலிஸார் விசாரணை

இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள மாத்தறை, கந்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலல்ல பகுதியில் அமைந்துள்ள விடுதி...

world 40
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரதுகல பூர்வீகக் கிராமத்தின் தலைவர் காலமானார்

இலங்கையின் மடுல்ல பிரதேசத்திற்குட்பட்ட ரதுகல (Rathugala) பூர்வீகக் கிராமத்தின் தலைவரான டானிகல மகா பந்தலகே சுதா...