23 6521f851448e2
உலகம்செய்திகள்

இஸ்ரேலுக்குள் எப்படி நுழைந்தோம்..! ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Share

இஸ்ரேலுக்குள் எப்படி நுழைந்தோம்..! ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ

இஸ்ரேல் நாட்டு ராணுவத்தை தாண்டி எவ்வாறு ஹமாஸ் படைகள் இஸ்ரேல் நாட்டிற்கு நுழைந்தது என்ற வீடியோவை ஹமாஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

இன்று அதிகாலை பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் Al-Aqsa Flood ஆபரேஷன் என்ற பெயரில் இஸ்ரேல் மீது  கிட்டத்தட்ட 5000 ஏவுகணைகளை வெறும் 20 நிமிடங்களில் ஏவி தாக்குதல் நடத்தினர்.

மேலும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த தொடங்கியுள்ளனர்.

இஸ்ரேலிய பகுதிக்குள் நுழைந்த ஹமாஸ் அமைப்பினர் பெண் ராணுவ வீரர்கள் மற்றும் இஸ்ரேலிய மக்களை காசா பகுதிக்கு பிணைக் கைதிகளாக கடத்தி சென்றுள்ளனர்.

இதற்கிடையில் இரண்டாவது முறையாக மீண்டும் 150 ராக்கெட்டுகளை இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஹமாஸ் அமைப்பினர் ஏவினர்.

இந்நிலையில் ஹாமஸ் அமைப்பினர் முதலில் எவ்வாறு இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தினர் என்பது குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதைப்போல் ஹாமஸ் அமைப்பினர்கள் எவ்வாறு தடுப்புகளை தகர்த்தெறிந்து இஸ்ரேலுக்குள் நுழைந்தனர் என்ற வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

இது சர்வதேச சமூகங்களின் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து ஹமாஸ் படைகளை அழிக்க இஸ்ரேல் ராணுவம் தனது முழு அதிகாரத்தையும் பயன்படுத்தும் என இஸ்ரேல் நாட்டின் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

அத்துடன் காசா பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறும், இந்த கருப்பு நாளுக்கு பழிவாங்கும் விதமாக காசா நகரம் இடிபாடுகளின் நகரமாக மாற்றப்படும் எனவும் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...