rtjy 179 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது எப்படி?

Share

இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது எப்படி?

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சீனா எப்படி இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியது என்ற தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

இதன்படி இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை சீனா வழங்கவில்லை எனவும், அதற்கு பதிலாக வடகொரியா தனது முகவர்கள் மூலம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், கலாநிதி மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு வடகொரிய அதிபர் சென்றமை தொடர்பிலும் ரஷ்யாவிற்கு வடகொரியா எவ்வாறு ஆயுதங்களை வழங்கவுள்ளது குறித்தும் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவிடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ரஷ்யா சென்றுள்ளார். இந்த சந்திப்பு ரஷ்யாவிற்கு கூடுதல் ஆயுதங்கள், உணவு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை வடகொரியாவிற்கு பெற உதவும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வடகொரியாவின் வர்த்தக பங்காளியான சீனா, மூன்றாம் தரப்பான வடகொரியா மூலம் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்க முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போர் வரும் குளிர்காலத்தில் புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லப்படும். இது மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் யுத்தத்தின் போது சீனா இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்கவில்லை எனவும், அதற்கு பதிலாக வடகொரியா தனது முகவர்கள் மூலம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், அதே நிலைதான் இன்று ரஷ்யாவிற்கும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share
தொடர்புடையது
IMG 9924 1024x683 1
செய்திகள்உலகம்

சூடானில் மார்ச் மாதத்துடன் உணவு இருப்பு தீரும் அபாயம்: 700 மில்லியன் டொலர் அவசர நிதியைக் கோருகிறது ஐ.நா!

உள்நாட்டுப் போரினால் பேரழிவைச் சந்தித்துள்ள சூடானில், உடனடியாகக் கூடுதல் நிதி உதவி வழங்கப்படாவிட்டால் மிக மோசமான...

10aa5a71cfd76011153a66552523da5f7560cde2db35ee6d414158cd57f94959
உலகம்செய்திகள்

டோக்கியோவில் மின்தடையால் ரயில் சேவைகள் முடக்கம்: 6.7 லட்சம் பயணிகள் பாதிப்பு!

ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில் இன்று (16) ஏற்பட்ட திடீர் மின்தடை மற்றும் தீ விபத்து காரணமாக...

1735040735 c
செய்திகள்இலங்கை

கிராம அலுவலர் மீது தாக்குதல்: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை ஜனவரி 20-ல் ஆஜர்ப்படுத்த நீதிமன்றம் உத்தரவு!

கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர் க....

Keheliya Rambukwella
செய்திகள்இலங்கை

கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை: நீதவான் நீதிமன்ற வழக்கு முடிவு!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அவரது புதல்வர் ரமித் ரம்புக்வெல்ல மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராகப்...