rtjy 179 scaled
இலங்கைஉலகம்செய்திகள்

இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது எப்படி?

Share

இறுதி யுத்தத்தில் இலங்கைக்கு சீனா ஆயுதங்களை வழங்கியது எப்படி?

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது சீனா எப்படி இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியது என்ற தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.

இதன்படி இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை சீனா வழங்கவில்லை எனவும், அதற்கு பதிலாக வடகொரியா தனது முகவர்கள் மூலம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், கலாநிதி மஹிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவிற்கு வடகொரிய அதிபர் சென்றமை தொடர்பிலும் ரஷ்யாவிற்கு வடகொரியா எவ்வாறு ஆயுதங்களை வழங்கவுள்ளது குறித்தும் அவர் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவிடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடகொரிய தலைவர் கிம் ஜோங்-உன் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து கலந்துரையாடுவதற்காக ரஷ்யா சென்றுள்ளார். இந்த சந்திப்பு ரஷ்யாவிற்கு கூடுதல் ஆயுதங்கள், உணவு மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை வடகொரியாவிற்கு பெற உதவும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், வடகொரியாவின் வர்த்தக பங்காளியான சீனா, மூன்றாம் தரப்பான வடகொரியா மூலம் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்க முடிவு செய்யும் என்றும் அவர் கூறினார்.

உக்ரைனில் நடக்கும் ரஷ்ய போர் வரும் குளிர்காலத்தில் புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லப்படும். இது மேற்கத்திய நாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் யுத்தத்தின் போது சீனா இலங்கைக்கு நேரடியாக ஆயுதங்களை வழங்கவில்லை எனவும், அதற்கு பதிலாக வடகொரியா தனது முகவர்கள் மூலம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்கியதாகவும், அதே நிலைதான் இன்று ரஷ்யாவிற்கும் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Share

Recent Posts

தொடர்புடையது
25 690749f63e1f3
இலங்கைசெய்திகள்

காவல்துறை உயர் மட்டத்தில் மாற்றம்: மூத்த டிஐஜி-களின் பதவிகள் இடமாற்றம் – நிர்வாகப் பிரிவில் சஞ்சீவ தர்மரத்ன நியமனம்!

காவல்துறையில் உள்ள மிக மூத்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் கடமைகள் மாற்றியமைக்கப்படவுள்ளதாகக் காவல்துறை தலைமையக வட்டாரங்கள்...

image 870x 68edd5575b92d
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை: இஷாரா செவ்வந்தியின் ‘போலி கடவுச்சீட்டு நாடகம்’ – இரட்டிப்புக் கோப்பு உருவாக்கப்பட்டது அம்பலம்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பின்னணியில் இருந்ததாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி, நேபாளத்தில் தயாரிக்கப்பட்ட முத்திரைப் பிழையான...

caption 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைப்பு: 6 உண்டியல்களில் இருந்து பெருந்தொகை பணம் கொள்ளை!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் நேற்று முன்தினம் இரவு...

102018246 f892fa86 2cbc 44fd b1e2 ac87ac946aba
செய்திகள்இலங்கை

உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு கோரி ஞானசார தேரர் கோரிக்கை: ‘பாதாள உலகக் குழுவினர் சதி’ என குற்றச்சாட்டு!

தமக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் பொதுபல சேனா...