24 661a83250e399
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் இடித்து தகர்க்கப்பட்ட புராதன இந்து கோவில்

Share

வெளிநாடொன்றில் இடித்து தகர்க்கப்பட்ட புராதன இந்து கோவில்

பாகிஸ்தானில் (Pakistan) புராதான மிக்க இந்து கோயிலொன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் (Pakistan) இந்து கோயில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கோயில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் (Afghanistan) – பாகிஸ்தான் (Pakistan) எல்லையையொட்டி கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லாண்டி கோடல் பஜார் நகரில் அமைந்துள்ள ’கைபர் கோயில்’, 1947-ஆம் ஆண்டு முதல் பக்தர்கள் யாரும் வழிபடாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது.

காலப்போக்கில் சிதிலமைடைந்து காட்சியளித்த கோயில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுடைய வரலாற்று கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்து மறுசீரமைப்பது, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் பொறுப்பு என பாகிஸ்தான் (Pakistan) இந்து கோயில் நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ நிலப் பதிவேட்டில் கோயிலைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை என அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
image 1536756675 1c1974475a
செய்திகள்இலங்கை

மருத்துவமனை உதவியாளரின் மோட்டார் சைக்கிளில் T-56 மற்றும் 9mm தோட்டாக்கள் பறிமுதல்!

கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T-56 ரகத்தைச்...

MediaFile 5
உலகம்செய்திகள்

நுளம்புகள் இல்லாத கடைசி இடமாக கருதப்பட்ட ஐஸ்லாந்தில் முதல் முறை நுளம்பு கண்டுபிடிப்பு!

பூமியில் நுளம்புகள் முற்றிலும் இல்லாத இரண்டு இடங்களாக ஐஸ்லாந்து மற்றும் அண்டார்டிகா மட்டுமே கருதப்பட்டு வந்தது....

images 5 2
செய்திகள்இலங்கை

ஏற்றுமதித் துறை ஸ்திரமான வளர்ச்சி: 9 மாதங்களில் $12.98 பில்லியன் வருவாய் – EDB அறிக்கை!

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) வெளியிட்டுள்ள தகவலின்படி, 2025 ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான...

25 68fa28324343d
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி பெக்கோ சமனுக்குச் சொந்தமான ₹8 கோடி மதிப்புள்ள சொகுசுப் பேருந்துகள் பறிமுதல்!

பாதாள உலகக் குற்றவாளியான பெக்கோ சமனுக்குச் சொந்தமான 8 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான 2...