24 661a83250e399
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் இடித்து தகர்க்கப்பட்ட புராதன இந்து கோவில்

Share

வெளிநாடொன்றில் இடித்து தகர்க்கப்பட்ட புராதன இந்து கோவில்

பாகிஸ்தானில் (Pakistan) புராதான மிக்க இந்து கோயிலொன்று இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோயில் இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாகிஸ்தான் (Pakistan) இந்து கோயில் நிர்வாகக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கோயில் அமைந்திருந்த இடத்தில் புதிதாக வர்த்தக வளாகம் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் (Afghanistan) – பாகிஸ்தான் (Pakistan) எல்லையையொட்டி கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லாண்டி கோடல் பஜார் நகரில் அமைந்துள்ள ’கைபர் கோயில்’, 1947-ஆம் ஆண்டு முதல் பக்தர்கள் யாரும் வழிபடாத காரணத்தால் மூடப்பட்டுள்ளது.

காலப்போக்கில் சிதிலமைடைந்து காட்சியளித்த கோயில், கடந்த 10 நாள்களுக்கு முன்பு முழுமையாக இடிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சிறுபான்மையின மக்களுடைய வரலாற்று கட்டடங்களின் பாதுகாப்பை உறுதி செய்து மறுசீரமைப்பது, மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் பொறுப்பு என பாகிஸ்தான் (Pakistan) இந்து கோயில் நிர்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ நிலப் பதிவேட்டில் கோயிலைப் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை என அரசுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...