15 13
இந்தியாஉலகம்செய்திகள்

இந்தி தேசிய மொழி அல்ல.., கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேச்சுக்கு அதிர்ந்த அரங்கம்

Share

இந்தி தேசிய மொழி இல்லை என்றும் அது அலுவல் மொழி மட்டும் தான் என்றும் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் பல்வேறு சாதனைகளை புரிந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் தனியார் பொறியியல் கல்லூரியின் 23 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக அஸ்வின் கலந்து கொண்டார்.

அப்போது, மாணவ மாணவியருக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், ” தமிழ் ஓகே வா, ஆங்கிலம் ஓகே வா, ஹிந்தி ஓகே வா என மாணவர்களை நோக்கி கேட்ட போது தமிழுக்கு மட்டும் மாணவர்கள் ஆரவாரம் எழுப்பினர்.

அப்போது, மாணவர்கள் ஹிந்தி மொழிக்கு ஆதரவு தெரிவிக்காததால், ஹிந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி தான் என்று” கூறினார். இதனை கேட்ட மாணவர்கள் மீண்டும் சத்தத்தை எழுப்பினர்.

Share
தொடர்புடையது
world 204
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் 21 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat...

world 203
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா பம்பரக்கலையில் பயங்கர தீ விபத்து: 3 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பல்!

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை (Pambarakelle) PWD லயன் குடியிருப்பு பகுதியில்...

world 202
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு அமைதி முன்னெடுப்பு: உலக நாடுகளின் பாராட்டைப் பெறும் பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு!

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஒரு...

world 201
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அமைதிப் பேரணிக்காக இலங்கை வரும் ‘அலோகா’: விமானத்தில் பயணிகளுடன் பயணிக்கச் சிறப்பு அனுமதி!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள சர்வதேச “அமைதிப்...