24 663223ff94b71
உலகம்செய்திகள்

சீனாவில் திடீரென சரிவடைந்த நெடுஞ்சாலை…19 பேர் உயிரிழப்பு!

Share

சீனாவில் திடீரென சரிவடைந்த நெடுஞ்சாலை…19 பேர் உயிரிழப்பு!

சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை சரிவடைந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் இன்று (01) அதிகாலை 2 மணியளவில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்ஜோவு நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் அண்மைக்காலமாக அதிகரித்த மழைவீழ்ச்சி நிலவியதாகவும், இதன் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்ஜோவு நகரில் உள்ள நெடுஞ்சாலை 18 மீட்டர் தூரம் அளவுக்கு சரிந்து விழுந்துள்ளது.

இரவு நேரத்தில் எதிர்பாராத வேளையில் இந்த சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக வந்த 18 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மேல் இருந்து கீழே உருண்டு விழுந்து தீப்பிடித்துள்ளன.

அதுமாத்திரமன்றி இச்சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் 30 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...