24 663223ff94b71
உலகம்செய்திகள்

சீனாவில் திடீரென சரிவடைந்த நெடுஞ்சாலை…19 பேர் உயிரிழப்பு!

Share

சீனாவில் திடீரென சரிவடைந்த நெடுஞ்சாலை…19 பேர் உயிரிழப்பு!

சீனாவில் கனமழை காரணமாக நெடுஞ்சாலை சரிவடைந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் இன்று (01) அதிகாலை 2 மணியளவில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்ஜோவு நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, சம்பவம் நிகழ்ந்த பகுதியில் அண்மைக்காலமாக அதிகரித்த மழைவீழ்ச்சி நிலவியதாகவும், இதன் காரணமாக பல சேதங்கள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள மெய்ஜோவு நகரில் உள்ள நெடுஞ்சாலை 18 மீட்டர் தூரம் அளவுக்கு சரிந்து விழுந்துள்ளது.

இரவு நேரத்தில் எதிர்பாராத வேளையில் இந்த சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக வந்த 18 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மேல் இருந்து கீழே உருண்டு விழுந்து தீப்பிடித்துள்ளன.

அதுமாத்திரமன்றி இச்சம்பவத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் 30 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...