ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
உலகம்செய்திகள்

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

Share

ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

ஜேர்மனியில் வாழும் திறன்மிகுப் பணியாளர்கள், இனி தங்கள் குடும்பத்தினரையும் ஜேர்மனிக்கு வரவழைத்துக்கொள்ளும் வகையில் புதிய சட்டம் ஒன்று தயாராகிவருகிறது.

திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் என்னும் அந்த சட்டத்தின் கீழ், ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவி, மற்றும் குழந்தைகளை மட்டும் அல்லாது, தங்கள் பெற்றோரைக்கூட இனி ஜேர்மனிக்கு அழைத்துக்கொள்ளலாம்.

கடந்த மாதம், அதாவது, ஜூன் மாதம் 23ஆம் திகதி, ஜேர்மனி நாடாளுமன்றத்தின் கீழவையில் இந்த சட்டத்துக்கு ஒப்புதலளிக்கப்பட்டுவிட்டது.

இம்மாதம், அதாவது, ஜூலை 7ஆம் திகதி, நாடாளுமன்றத்தின் மேலவையில், திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் தொடர்பிலான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

திட்டமிட்டப்படி, எல்லாம் நல்லபடியாக நடந்துமுடிந்தால், 2023ஆம் ஆண்டின் இலையுதிர்காலம் அல்லது குளிர்காலத்துக்குள் திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் மசோதா ஜனாதிபதியால் சட்டமாக்கப்பட்டு அமுல்படுத்தப்படும்.

எப்படியும், இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு துவக்கத்தில் திறன்மிகுப் பணியாளர் புலம்பெயர்தல் சட்டம் அமுலுக்கு வர வாய்ப்புள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 20 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வைத்தியர் சத்தியமூர்த்தி அதிரடி முறைப்பாடு! – மக்கள் எழுச்சி கட்சி நிறுவனருக்கு எதிராகப் பொலிஸார் விசாரணை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி அவர்கள், அகில இலங்கை மக்கள் எழுச்சி...

image 1200x800 19 2
செய்திகள்இந்தியா

இஸ்ரேல் செல்லும் பிரதமர் மோடி! – 56 இராணுவ நிறுவனங்களுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25-ஆம் திகதி இஸ்ரேலுக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ...

001
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி-யில் ஆஜராகிறார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க! – நிதி துஷ்பிரயோக வழக்கில் பரபரப்பு விசாரணை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நிதி முறைகேடு தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, அவரது...