rtjy 38 scaled
உலகம்செய்திகள்

இஸ்ரேல் பிணை கைதிகளுக்கு போதை மருந்து கொடுத்த ஹமாஸ்

Share

இஸ்ரேல் பிணை கைதிகளுக்கு போதை மருந்து கொடுத்த ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிக்கும் போது அவர்கள் அமைதியாக இருப்பதற்காக போதை மருந்து கொடுத்ததாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டி உள்ளது.

இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் இருந்து கடந்த அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் தீவிரவாதிகள் சுமார் 240 பேரைக் கடத்திச் சென்றனர். இவர்களில் 105 பேர் கடந்த மாத இறுதியில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் பிணைக் கைதிகளை விடுவிக்கப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு க்ளோனெக்ஸ் என்ற மயக்க மருந்துகள் கொடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இஸ்ரேலின் சுகாதார அமைச்சக பொது மருத்துவத் தலைவர் ஹகர் மிஸ்ராஹி கூறுகையில், ‘செஞ்சிலுவைச் சங்கத்திடம் இஸ்ரேல் பிணைக்கைதிகளை ஒப்படைப்பதற்கு முன்பு, அவர்களுக்கு க்ளோனெக்ஸ் என்ற போதை மாத்திரைகளை ஹமாஸ் தீவிரவாதிகள் கொடுத்துள்ளனர்.

அதனால் விடுவிக்கப்பட்ட பிணையக் கைதிகள் அமைதியாக இருந்தனர். அவர்கள் அமைதியாக இருப்பதற்காக அவர்களுக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.

மேலும், விடுவிக்கப்பட்ட பிணைக் கைதிகளின் இரத்தப் பரிசோதனையின் அடிப்படையில் போதை மருந்து கொடுக்கப்பட்டதா? அல்லது அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தெரியவந்ததா? என்பது பற்றியும் எத்தனை பேருக்கு போதை மருந்து கொடுக்கப்பட்டது என்பது குறித்தும் மிஸ்ராஹி குறிப்பிடவில்லையென கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 6
செய்திகள்உலகம்

வட்ஸ்அப்பில் அதிரடி மாற்றங்கள்: ஐபோன் பயனர்களுக்கும் இரட்டை கணக்கு வசதி அறிமுகம்!

பயனர்களின் அன்றாடத் தகவல் பரிமாற்றத்தை மேலும் எளிமையாகவும், நேர்த்தியாகவும் மாற்றும் நோக்கில் வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம்...