tamilni 337 scaled
உலகம்செய்திகள்

ரஸ்ய – உக்ரைன் போர்; ஆசியாவில் ஏற்படவுள்ள தாக்கம்

Share

ரஸ்ய – உக்ரைன் போர்; ஆசியாவில் ஏற்படவுள்ள தாக்கம்

ரஸ்யா – உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு இடையிலான போர் காரணமாக ஆசியாவில் உணவு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் உக்ரேனிலிருந்து தானிய வகைகளை ஏற்றுமதி செய்வது குறித்த கருங்கடல் தானிய இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தைகளில் இருந்து ரஷ்யா விலகிக் கொண்டது.

இந்த நடவடிக்கையானது ஆசிய நாடுகளை பெரிதும் பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உக்ரேனின் ஏற்றுமதியில் ஏற்படும் வீழ்ச்சியானது வேறு நாடுகளில் இருந்து தானிய வகைகளை பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனின் கருங்கடல் தானிய இணக்கப்பாட்டு திட்டத்தின் கீழ் 46 வீதமான தானிய வகைகள் ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்பதுடன் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 40 வீதமான தானியங்களும், 12 வீதமான தானிய வகைகள் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உக்கிரனின் தானிய வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடாக சீனா காணப்படுகின்றது.

நான்கில் ஒரு பகுதி அதாவது இருபத்தைந்து விதமான பொருட்களை சீனா இறக்குமதி செய்வதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவுப் பொருள் இறக்குமதி செய்வது தொடர்பில் ஏற்பட்டுள்ள முரண்பாட்டு நிலைமையானது ஆசிய நாடுகளின் உணவு பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது.

இதனால் தானிய வகைகள் மற்றும் மரக்கறி எண்ணெய் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் எனவும் விலை அதிகரிப்பு ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் போர் காரணமாக இவ்வாறு உணவு பொருட்களுக்கு ஏற்படக்கூடிய தட்டுப்பாடு ஆசிய நாடுகளை அதிக அளவில் பாதிக்கும் என சர்வதேச ஊடகமொன்று அறிக்கையிட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
6
இலங்கைசெய்திகள்

செம்மணி தமிழின படுகொலைகளும் சிங்களவர்களின் மனநிலையும்

இலங்கையில் தமிழின படுகொலையின் மற்றுமொரு சாட்சியமான செம்மணி மனித புதைகுழி இன்று மனித உரிமை ஆர்வலர்களை...

5
இலங்கைசெய்திகள்

குடும்பமாக சேர்ந்து செய்யும் மோசமான செயல் – பெண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு

குருணாகலில் பெண்களை அச்சுறுத்தி குடும்பமாக கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.. மஹாவ பகுதியில் மோட்டார் சைக்கிள்களில்...

Murder 1
இலங்கைசெய்திகள்

விமல் வீரவன்சவின் மனைவிக்கு எதிராக மீண்டும் நெருக்கடி

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு எதிரான வழக்கின் சாட்சியங்களை நவம்பர் 11...

Murder
இலங்கைசெய்திகள்

மனதை உருக்கிய இன்றைய செம்மணியின் முக்கிய அடையாளம்!

யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி மனிதப் புதுகுழியில் இருந்து இன்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வில் சிறுவர்கள் விளையாடும்...