உலகம்செய்திகள்

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்

Share
24 66162a51ef12e
Share

கூகுள் அறிமுகப்படுத்தியுள்ள புதிய அம்சம்

கூகுள் நிறுவனமானது அண்ட்ரொய்ட் 15 (Android 15) புதுப்பிப்பை அறிமுகப்படுத்தவுள்ள நிலையில் அது ஏராளமான புதிய அம்சங்களை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது, இது பயனர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விமர்சனத்திற்குள்ளாகியிருப்பதாகவும் ஒரு தரப்பால் கூறப்படுகிறது.

அந்த வகையில், இந்த அண்ட்ரொய்ட் 15 புதுப்பிப்பில் ப்ளூடூத் மோட் (New Bluetooth Mode) என்ற அம்சமும், லுக்அப் (LookUp) என்ற புதிய கருவி (Tool) அமைப்பும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இந்த ப்ளூடூத் மோட் (New Bluetooth Mode) அம்சமானது பலர் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தாலும் சில பயனர்கள் மத்தியில் அந்தரங்க பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான கேள்விகளையும் பரவலாக ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

வழக்கமாக ஸ்மார்ட்போனில் உள்ள ப்ளூடூத் (Bluetooth) அம்சத்தை ஓஃப் அல்லது டிசேபிள் (Off or Disable) செய்துவிட்டால் என்னவாகும்? அடுத்த நொடியே போன் உடன் இணைக்கப்பட்டிருந்த அனைத்து வகையான ப்ளூடூத் (Bluetooth) சேவைகளில் இருந்தும் பயனர்கள் முழுவதுமாக துண்டிக்கப்படுவார்கள்.

ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த அண்ட்ரொய்ட் 15 (Android 15) புதுப்பிப்பில் வரும் ப்ளூடூத் மோட் (New Bluetooth Mode) ஆனது ப்ளூடூத் ஐ (Bluetooth) எப்போதும் செயற்பாட்டு நிலையிலேயே வைத்திருக்கும் என்று கூறப்படுகிறது.

அதாவது, புதிய மாற்றம் செய்யப்பட்ட ப்ளூடூத் (Bluetooth) அம்சத்தில் ப்ளூடூத் ஓஃப் (off) செய்யப்பட்டாலும் பார்ப்பதற்கு ஓஃப் செய்யப்பட்டு இருப்பது போல தோன்றினாலும், அது குறைந்த ஆற்றல் நிலையில் (Low-energy state) தொடர்ந்து செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக இந்த புதுப்பிப்பு அறிமுகப்படுத்தவுள்ள லுக்அப் (LookUp) என்ற புதிய கருவி (Tool) அமைப்பானது, தொலைபேசிக்கு வரும் தேவையற்ற அழைப்புகளை இனங்கண்டு அழைப்பை ஏற்க வேண்டுமா, புறக்கணிக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

Share
Related Articles
8 7
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை 10 மணியளவில்...

4 7
இலங்கைசெய்திகள்

தேர்தல் பணிக்காக சென்ற இளம் பெண் அரசாங்க அதிகாரி உயிரிழப்பு

கண்டி, பேராதனை பொலிஸ் பிரிவில் உள்ள கன்னொருவ ஆரம்ப பாடசாலையில் தேர்தல் பணிக்காகச் சென்ற அரசாங்க...

5 7
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்லைக்கழகத்தில் 11 மாணவர்களுக்கு வகுப்புத் தடை

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதைச் சம்பவத்தின் எதிரொலியாக பதினொரு மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப...

7 7
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிக்குன்குண்யா நோயை இனம் காண்பதில் சிக்கல்

நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் சிக்குன்குண்யா நோயை இனம் காண்பதற்கான மருத்துவ உபகரணங்களுக்குப் பற்றாக்குறை நிலவுவதாக...