8 11 scaled
உலகம்செய்திகள்

லண்டனில் இந்திய இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை

Share

லண்டனில் இந்திய இளம்பெண் கத்தியால் குத்திக்கொலை

லண்டனில், நேற்று மாலை இந்திய இளம்பெண் ஒருவர் குத்திக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை உருவாக்கியுள்ளது.

நேற்று மாலை 4.10 மணியளவில், லண்டனிலுள்ள Croydonஇல் அமைந்துள்ள வீடு ஒன்றிற்கு பொலிசார் அழைக்கப்பட்டார்கள்.

ஆம்புலன்ஸ், மருத்துவ உதவிக்குழுவினருடன் விரைந்த பொலிசார், அந்த வீட்டில் 19 வயது இளம்பெண் ஒருவர், கத்திக்குத்துக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டுள்ளனர்.

உடனடியாக அவரை பரிசோதித்த மருத்துவ உதவிக்குழுவினர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அந்தப் பெண் ஒரு இந்தியர் என்றும், சமீபத்தில்தான் அவர் இந்தியாவிலிருந்து பிரித்தானியாவுக்கு வந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த துயர சம்பவம் தொடர்பாக, அதே வீட்டிலிருந்த 23 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அந்த பெண்ணுக்கு அறிமுகமானவர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அவருக்கும் தலையில் சிறிய காயம் ஏற்பட்டிருந்ததால், அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பொலிசார் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
MediaFile 2
செய்திகள்விளையாட்டு

ஒருநாள் தொடர்: டக்வத் லூயிஸ் முறையில் ஆஸ்திரேலியா அபார வெற்றி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டியில், டக்வத் லூயிஸ் முறைப்படி (D/L Method)...

1760884555 Paris Louvre Museum Sri Lanka 6
செய்திகள்உலகம்

உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் திருட்டு: பாரிஸில் அருங்காட்சியகம் மூடல்!

பாரிஸில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான, உலகப் புகழ்பெற்ற லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) திருட்டுச்...

IMG 20251018 WA00431 vb 16
செய்திகள்இந்தியா

கரூர் உயிரிழப்பு: 41 குடும்பங்களுக்கு நிவாரணம் அனுப்பிய விஜய்! 

கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகப் பிரசாரக் கூட்டத்தில்...

25 68f5bd64c9d96
செய்திகள்இலங்கை

ஓரியோனிட்ஸ் விண்கல் மழை இன்று இரவு இலங்கை வான்பரப்பில் காண வாய்ப்பு!

இலங்கையின் வான் பரப்பிலும் இன்று (அக்டோபர் 20) இரவு விண்கல் மழை பொழிவைப் பார்வையிட மக்களுக்கு...