tamilni 370 scaled
உலகம்செய்திகள்

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி: பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்

Share

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி: பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்

ஜேர்மனியில் சமீபத்தில் நடந்துமுடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற புலம்பெயர்தலுக்கெதிரான அரசியல்வாதி ஒருவர் பதவியேற்கும் முன்பே, அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள், மக்கள் புலம்பெயர்தலை எதிர்க்கும் வலதுசாரிக் கட்சியினருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளதைக் காட்டின.

அதனால், ஜேர்மன் அரசியலில் பெரும் அதிர்வலைகள் உருவாகின. ஆளுங்கட்சியினரே, புலம்பெயர்தலுக்கெதிராக நடவடிக்கைகளைத் துவங்க இருப்பதாக அறிவிக்கவேண்டிய ஒரு கட்டாயத்துக்கு ஆளானார்கள்.

சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்ற அரசியல்வாதி பதவியேற்கும் முன்பே கைது வாரண்ட்
இந்நிலையில், சமீபத்திய தேர்தலில் வெற்றி பெற்றவரான வலதுசாரிக் கட்சி அரசியல்வாதி ஒருவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The Alternative for Germany Party (AfD) என்னும் வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்தவரான Daniel Halemba (22) என்னும் அரசியல்வாதிக்கு எதிராகத்தான் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எதற்காக அவருக்கு எதிராக கைது வாரண்ட் என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை. அவர் இதுவரை கைது செய்யப்படவும் இல்லை, சரணடையவும் இல்லை.

இன்னொரு விடயம் என்னவென்றால், அமைச்சர்கள் தண்டனை போன்ற விடயங்களிலிருந்து தப்பமுடிவும். ஆனால், Daniel இன்னமும் அமைச்சராக பதவியேற்கவில்லை. ஆகவே, அவர் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வாரா, அல்லது கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படுவாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...