உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் நெகிழ்ச்சியான முறையில் பேய் திருமணம்

Share
24 66735d438e248
Share

வெளிநாடொன்றில் நெகிழ்ச்சியான முறையில் பேய் திருமணம்

மலேசியாவில்(Malaysia) திருமண பந்தத்தில் இணைய தயாராகிய நிலையில் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்த காதல் ஜோடிக்கு அவர்களது பெற்றோர் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மலேசியாவில் வசித்து வந்த ஜிங்ஷன் என்ற இளைஞன் லீ என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இருவருக்கும் ஜூன் 2 ஆம் திகதி திருமணம் நடைபெறுவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், துரதிர்ஷ்டவசமாக கடந்த மே மாதம் 24 ஆம் திகதி அந்த காதல் ஜோடி ஒரு கார் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனால், இரு குடும்பத்தினரும் மிகுந்த மனவேதனையடைந்த நிலையில், அவர்களது உயிர் மண்ணை விட்டு போனாலும் குறிப்பிட்ட நாளில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர்.

அந்தவகையில், அவர்கள் பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

அதன்படி, ஒரு மண்டபத்தில் இறந்த காதல் ஜோடியின் புகைப்படம் மற்றும் அவர்கள் போன்ற உருவ பொம்மையை வைத்து பேய் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த பேய் திருமணத்தால் உயிரிழந்த காதல் ஜோடி ஒன்றிணைவர் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

மேலும்,இந்த விநோத திருமணம் குறித்த புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Share
Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...