29
உலகம்செய்திகள்

ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் நாடுகடத்தியுள்ள ஜேர்மனி

Share

ஆப்கானிஸ்தான் நாட்டவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் நாடுகடத்தியுள்ள ஜேர்மனி

குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 28 ஆப்கானிஸ்தான் (Afghanistan) நாட்டவர்களை ஜேர்மனி (Germany) நாடு கடத்தியுள்ளது.

2021ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மனித உரிமைகள் தொடர்பான அச்சுறுத்தல் காரணமாக ஆப்கானிஸ்தானுக்கு நாடுகடத்தும் நடவடிக்கையை ஜேர்மனி நிறுத்தியிருந்தது.

இதற்கிடையில், கடந்த வாரம் ஜேர்மனின் உள்ளூர் விழா ஒன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், தாக்குதல்தாரி ஐ.எஸ் ஆதரவாளர் என்பது தெரிய வந்ததும், நாடுகடத்தும் நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுக்க வேண்டும் என்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, புலம்பெயர் கொள்கைகள் கடுமையாக்கப்படும் என்றும் நாடுகடத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றும் ஜேர்மனி அரசாங்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்நடவடிக்கையின் முதற்கட்டமாகவே தீவிர குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட 28 ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share
தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...