tamilnih 1 scaled
உலகம்செய்திகள்

விலங்குணவை உட்கொள்ளும் மக்கள் : காசாவில் அவல நிலை

Share

விலங்குணவை உட்கொள்ளும் மக்கள் : காசாவில் அவல நிலை

காசாவின் வடக்கு பகுதிக்கு உதவிகள் அனுப்புவதை தொடர்ந்து தடுத்துவரும் இஸ்ரேல் நிர்வாகத்தால், அங்குள்ள மக்கள் கால்நடை தீவனத்தில் உயிர்வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சிறுவர்கள் பல நாட்கள் உணவின்றி இருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குடிநீருக்காகவும் பிற தேவைகளுக்காவும் மக்கள் நிலத்தடி நீரை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

எந்த உதவிகளும் பெற முடியாமல் சுமார் 300,000 மக்கள் வடக்கு பகுதிகளில் சிக்கியுள்ளதாகவும், பஞ்சம் ஏற்படும் நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவதாகவும் ஐ.நா எச்சரித்துள்ளது.

அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் 14 சதவிகிதம் அளவுக்கு உணவு உதவிகள் நிராகரிக்கப்பட்ட நிலையில், ஜனவரி மாதம் 56 சதவிகிதமாக அது அதிகரித்துள்ளது என்றே கூறப்படுகிறது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டால் மட்டுமே உணவு உட்பட உதவிகள் தங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Share
தொடர்புடையது
1722752828 dds
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த இலங்கை பிரஜை இராமேஸ்வரத்தில் கைது: புழல் சிறையில் அடைப்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து கடல் மார்க்கமாகச் சட்டவிரோதமாகப் புறப்பட்டு, இந்தியக் கடற்கரையை அடைந்த இலங்கை பிரஜை ஒருவர், இராமேஸ்வரத்தில்...

2 nurse
இலங்கைசெய்திகள்

தாதியர் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: 175 வெற்றிடங்களை நிரப்ப உடனடியாக ஆட்சேர்ப்பு – சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாட்டின் தாதியர் கல்லூரிகளில் (Nursing Colleges) தாதியர் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாக, ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு...

MediaFile 3 1
செய்திகள்அரசியல்இலங்கை

போதைப்பொருள் உற்பத்தி வழக்கு: சம்பத் மனம்பேரிக்கு சொந்தமான பேருந்து, கார், கெப் வாகனம் பறிமுதல்!

தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ஒரு...

1728539417 vimalveravamnsa 2
செய்திகள்அரசியல்இலங்கை

நவம்பர் 21 எதிர்ப்புப் பேரணி: தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்க மறுப்பு – விமல் வீரவங்ச அறிவிப்பு!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என தேசிய...