rtjy 19 scaled
உலகம்செய்திகள்

காசா சுரங்க பாதைகள் மக்களுக்காக அல்ல: ஹமாஸின் அறிவிப்பு

Share

காசா சுரங்க பாதைகள் மக்களுக்காக அல்ல: ஹமாஸின் அறிவிப்பு

காசாவில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகள் இராணுவ வீரர்களின் பாதுகாப்பிற்காக மட்டுமே தவிர பொதுமக்களுக்கு அல்ல என ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

பாலஸ்தீன ஆதரவு பெற்ற காசாவின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேல் இராணுவத்துக்கும் இடையிலான போர் மூன்று வாரங்களைக் கடந்து நீடித்து வருகிறது.

போரின் இரண்டாவது கட்டமாக, காசாவின் முக்கிய எல்லையில் நுழைந்து இஸ்ரேல் இராணுவத்தினர் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.

காசா சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, போர் தொடங்கியதிலிருந்து இதுவரை 8,300 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 3,457 பேர் சிறுவர்கள் எனவும் எஞ்சியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பெண்கள், முதியவர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் தொலைக்காட்சியில் பேசிய ஹமாஸ் படையைச் சேர்ந்த மெளசா அபு மார்ஸோக், தங்களின் இஸ்லாமியக் குழுவுக்கு சுரங்கப்பாதை அல்லது பதுங்குக் குழியினுள் இருந்து தாக்கும் வாய்ப்பு மட்டுமே உள்ளது. காசா மக்களைக் காக்க வேண்டியது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பொறுப்பு.

இலக்குகளிலிருந்து தப்பவும், எங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும் மட்டுமே சுரங்கப் பாதைகளை உருவாக்கியுள்ளோம். வான்வழித் தாக்குதல்களிலிருந்து தப்பிக்க இது மட்டுமே வழி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
ap26059256811672
செய்திகள்உலகம்

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல்: பிரம்மாண்டமான நடவடிக்கை என டிரம்ப் அறிவிப்பு!

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து, அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள்...

15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...