11 13
உலகம்செய்திகள்

காசாவில் நிரந்தர அமைதி.. ஹமாஸின் அறிவிப்பால் புதிய திருப்பம்

Share

போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸின் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யா அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பினை அவர் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இரு திசைகளிலும் ரஃபா கடவைத் திறப்பதும் அடங்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட அனைத்து பலஸ்தீன பெண்கள் மற்றும் சிறுவர்களை விடுவிப்பதும் அடங்கும் என கலீல் அல்-ஹய்யா குறிப்பிட்டுள்ளார்.

காசாவில் இஸ்ரேலின் இரண்டு ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டுவருவதாக உறுதியளிக்கும் மத்திய கிழக்கு அமைதி ஒப்பந்தத்தின் வளர்ச்சியில் முக்கிய தருணங்களில், ட்ரம்பின் தனிப்பட்ட தொடர்பு – ஒரு வலுவான கையாகவும், மென்மையான வழிகாட்டியாகவும் – முக்கிய பங்கு வகித்ததாகவும் அமெரிக்கா தெரிவித்தது.

காசாவில் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டத்தின் முதல் கட்டம், போரை நிறுத்தி, இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பதாக ட்ரம்ப் புதன்கிழமை அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ட்ரம்பின் குறித்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் ஒத்துழைப்பதாக அறிவித்திருந்த நிலையில், தற்போது ஹமாஸின் மூத்த தலைவரும் அதனை உறுதிபடுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...