tamilni 157 scaled
உலகம்செய்திகள்

ரூ.328 கோடி அபராதம் செலுத்திய பிரபல தொழிலதிபர்.., பின்னணியில் இருக்கும் கார் விவகாரம்

Share

பிரபல தொழிலதிபர் 142 வெளிநாட்டுக்கார்களை மதிப்பு குறைத்து இறக்குமதி செய்ததற்காக ரூ.328 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பையை சேர்ந்த தொழிலதிபரும், ரேமாண்ட் குரூப் நிர்வாக இயக்குநருமானவர் கெளதம் சிங்கானியா (Gautam Singhania). இவர், அண்மையில் தனது மனைவி நவாஸ் மோடியை பிரிவதாக அறிவித்தார். பின்னர், இருவரும் சொத்துக்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் Gautam Singhania, மும்பை கம்பல்லா ஹில்லில் இருக்கும் ஜெ.கே.ஹவுசில் கார் மியூசியம் வைக்க ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக உலகம் முழுக்க கார்களை வாங்கி இறக்குமதி செய்து வருகிறார். ஏற்கனவே, இவரிடம் 138 விண்டேஜ் கார்கள் உள்ளது.

இந்நிலையில், இவர் மீது வெளிநாட்டுக்கார்களை மதிப்பு குறைத்து இறக்குமதி செய்தததாக குற்றச்சாட்டு எழுந்தது.

கடந்த 2018 -21 -ம் ஆண்டுகளில் ரேமாண்ட் குரூப் வெளிநாடுகளில் கார்களை ஏலத்தில் எடுத்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்தது. அப்போது ரூ.229.72 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததாக நேரடிவரி புலனாய்வுத்துறை Gautam Singhania -க்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதில், ரூ.229.72 கோடி அபராதமும், அதனுடன் வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ.328 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. பின்னர், ஜெ.கே.இன்வெஸ்மென்ட் நிறுவனம் சார்பாக ரூ.328 கோடி அபராத தொகை செலுத்தப்பட்டது.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...