download 20 1 4
இலங்கைஉலகம்செய்திகள்

சிறுவர்களை நாடு கடத்தும் கும்பல்!

Share

சிறுவர்களை நாடு கடத்தும் கும்பல்!

மலேசிய கடவுச்சீட்டுகளை பயன்படுத்தி இலங்கையை சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்தும்  கும்பலொன்றை மலேசிய அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

கோலாலம்பூரில் தம்பதியினர் கைதுசெய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து  இலங்கையை சேர்ந்த சிறுவர்களை ஐரோப்பிய நாடுகளிற்கு கடத்தும் நடவடிக்கை குறித்து தெரியவந்துள்ளது.

பஹ்னு இன்டநசனல்ஸ் என்ற நிறுவனத்தினர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

12 வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் உள்ள வறிய மலேசிய குடும்பங்களிடமிருந்து அவர்களின் விபரங்களை பெற்று  அதனை பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு கடத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றன என  மலேசியாவின் குடிவரவு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ருஸ்லின் யுசோ தெரிவித்துள்ளார்.

12 வயதிற்கு உட்பட்ட குடும்பங்களிற்கு கடவுச்சீட்டு வழங்குவதாக தெரிவித்து அவர்களை குடிவரவு திணைக்களத்திற்கு அழைத்து மலேசிய சிறுவர்களின்  பிறப்பத்தாட்சி போன்றவற்றை இந்த கும்பலை சேர்ந்தவர்கள் பெற்றுக்கொண்டனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடிவரவு திணைக்களத்தில் விண்ணப்ப படிவங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும்போது இலங்கை சிறுவர்களை அழைத்து கைவிரல் அடையாளங்களை பதிவு செய்வார்கள்.

#srilankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...